Search This Blog

Wednesday, 21 December 2022

நெத்தியடி

 

  

நெத்தியடி

 

قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ

 

(அப்போது) இப்ராஹீம் கூறினார்: திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்கில் உதிக்கும்படிச் செய்! (பார்க்கலாம்)என்று கூறினார். (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப்போனான்.  திருக்குர்ஆன்:-  2:258

 

நாம் எப்போது எதைப் பேசினால் அல்லது எதைச் செய்தால் வெற்றியடைய முடியும் என்று சிந்தித்து செயல்படுவதையே சமயோசித அறிவு என்கிறோம். அந்த சமயோசித அறிவு சாமானியனுக்கு சாத்தியப்படாது. சமயோசித அறிவு பெற்றவர்கள் சாதித்தவை ஏராளம்.

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த "பாபில்" நாட்டு அரசன் "நம்ரூத் பின் கன்ஆன்" என்பவன் தன்னை இறைவனாக பிரகடனப்படுத்தினான்.


எனவே, இவன் இறைவன் விஷயத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் தர்க்கம் செய்தான். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவன் உயிர்கொடுப்பான்; இறக்கச்செய்வான்" என்று கூறினார்கள். அதற்கு அவன், "நானும் உயிர்கொடுப்பேன் இறக்கச்செய்வேன்" என்று வாதம் புரிந்தான். அவன் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெத்தியடியாக இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க செய்கிறான். முடிந்தால் நீ அதை மேற்கில் உதிக்க செய் பார்க்கலாம்" என்று கூறி அவனை வாயடைக்க செய்தார்கள். இதைப் பற்றியே தலைப்பில் காணும் திருவசனம் விவரிக்கிறது.


நரகம் எங்கே?

 

(பைசாந்திய மன்னர்) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் கடிதத்திற்குப் பதில் கடிதம் எழுதினார். அதில், ( إِنَّكَ دَعَوْتني إِلَى جَنَّةٍ عَرْضُها السَّمَاوَاتُ وَالْأَرْضُ، فَأَيْنَ النَّارُ؟ ) "(முஹம்மதே!) வானங்கள் மற்றும் பூமியின் அகலம் கொண்ட சொர்க்கத்திற்கு வருமாறு எனக்கு நீங்கள் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்; அப்படியாயின் நரகம் எங்குள்ளது? என்று கேட்டிருந்தார். அதற்கு அண்ணலார், ( سُبْحَانَ اللهِ! فَأَيْنَ اللَّيْلُ إذَا جَاءَ النَّهَارُ؟ ) “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) பகல் வந்தால் இரவு எங்கே போகிறது?” என்று (திருப்பிக் கேட்டு வாயடைக்குமாறு பதில்) எழுதினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

பகல் வந்துவிட்டால் இரவை நாம் காண முடிவதில்லை என்பதால் இரவு எங்குமே இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. அவ்வாறு (வானம், பூமி அளவுக்குச் சொர்க்கம் விசாலமாக இருக்கும் போது) நரகமானது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நாடினால் ஒரு இடத்தில் இருக்கும்.

 

பூமியின் ஒரு பகுதியைப் பகல் மூடிக்கொண்டால் இரவானது அதன் நேர் எதிர்த் திசைக்கு சென்றுவிடும். ஆகவே, வானங்கள் மற்றும் பூமியின் அகலம்  அளவிற்குச் சொர்க்கம் இருந்து, அதே நேரத்தில் நரகமும் இருப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் ஆலு இம்ரான் வசனம்-133

 

காரிஜியாக்கள்

 

ஒருமுறை காரிஜியாக்களின் தலைவர் ளிஹாக் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களை சந்திக்க வந்தார். உமையாக்களின் ஆட்சி காலத்தில் கூஃபாவில் அவர் செல்வாக்கு பெற்றிருந்தார்.

 

ளிஹாக்: வாளை உருவி நீட்டியவாறு இமாமவர்களிடம் "பாவமன்னிப்பு செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னார். இமாமவர்கள்:  எதற்காக என்று வினவினார்கள்.

 

ளிஹாக்: முஆவியா (ரலி) அவர்கள் மற்றும்  அலீ (ரலி)  அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின்போது தீர்ப்புக்கூற மூன்றாம் தரப்பு நடுவரை அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டதை நீங்களும் சரியென ஒப்புக்கொள்கிறீர்கள். அலீ (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் இருந்தபோதும் அவர்கள் இங்ஙனம் செய்திருக்கிறார் என்றால் என்ன பொருள்?

 

இமாமவர்கள்: (என்னைக் கொல்வது தான் நோக்கமென்றால் கொன்றுவிடுங்கள்.) உண்மையை அறிய ஆசைப்பட்டால் என்னை கொஞ்சம் பேச விடுங்கள். 


ளிஹாக்: விவாதிக்க விரும்புகிறேன்.

 

இமாமவர்கள்: நாம் விவாதிக்கும் விஷயத்தில் ஒரு முடிவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது


ளிஹாக்: நாம் இருவரும் ஒருவரை நடுவராக ஏற்றுக்கொள்ளலாம் என்றார். அவர்களிலிருந்தே ஒருவரை நடுவராக நியமித்தார்கள். இருவர் கருத்திலும் எது சரி? எது தவறு? என்பதை அவர் தீர்மானிக்கவேண்டும்.


இமாமவர்கள்:  ( وَیْحَكَ اَتُجَوِّزُ التَّحْکِیْمَ فِیْمَا یَشْجُرُ بَیْنِي وَبَیْنَكَ وَتُنْکِرُهُ عَلَی اثْنَیْنِ مِنْ صَحَابَةِ رسولِ اللهِ صلی الله علیه وسلم ) நீ நாசமாக! உனக்கும் எனக்கும் மத்தியில் நடைபெறும் விவதாத்தில் நடுவராக மற்றொருவர் இருப்பதை சரிதான் என்கிறாய். ஆனால், அந்த நபித்தோழர்களுக்கு மத்தியில் நடைபெற்ற விவதாத்தில் நடுவராக மற்றொருவர் இருந்ததை (தவறு என்று கூறி) வெறுக்கிறாயே?" (இதைத்தானே அவர்களும் செய்தார்கள். அப்புறம் அவரை மட்டும் குற்றம் சொல்கின்றீர்களே.) என்றார்கள்.

 

ளிஹாக் வாயே திறக்காமல் இடத்தை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.  நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லி, ஸுவரும் மின் ஹயாத்தித் தாபிஈன்

 

அறிஞர்கள் அவையில்

 

சுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), காழீ இப்னு அபூ லைலா (ரஹ்), ஷுரைக் (ரஹ்), இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகியோர் ஓர் அவையில் கூடியிருந்தனர்.

 

அங்கே ஒருவர் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது: ஓர் இடத்தில் சிலர் கூடி இருந்தனர். திடீரென ஒரு பாம்பு வெளிப்பட்டது. ஒருவர் மீது ஏறி விட்டது. பதற்றத்தில் அவர் உதறினார். அது அடுத்த ஆள் மீது போய் விழுந்தது. அவரும் பதறிப்போய் எடுத்து வீசினார். இப்படியாக அனைவரும் வீச போய் கடைசி மனிதரை அது தீண்டிவிட்டது. விஷம் தலைக்கேறி இறந்துவிட்டார். இப்போது அவருக்கான (திய்யத்) நஷ்டயீட்டுத் தொகையை யார் தர வேண்டும்?.

 

கொஞ்சம் சிக்கலான பிரச்சினை என்பதால் அனைவரும் யோசித்தனர். அவர்களில் ஒருவர் "அனைவரும் சேர்ந்து நஷ்டயீட்டுத் தொகை தரவேண்டும்" என்றார். மற்றொருவர் "முதல் மனிதர் தான் கொடுத்தாக வேண்டும்" என்றார். இப்படி பல கருத்துக்கள் விவாதித்தும் தீர்வு எட்ட வில்லை. இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். கடைசியில் அனைவரும் அவரை முன் நோக்கினர். தங்கள் கருத்து தான் என்ன? என்று வினவினர்.

 

இமாமவர்கள் "முதல் மனிதர் அடுத்தவர் மீது வீசினார். ஆனால் அவர் சாகவில்லை. எனவே, அவர் குற்றமற்றவர். இரண்டாமவரின் நிலையும் அப்படியே.  மூன்றாமவர் தன்மீது பாம்பு விழுந்ததும் பதற்றத்திலும் உயிரைக் காக்கும் துடிப்பிலும் தூக்கி எறிந்து விட்டார்.

 

கடைசி ஆளின் நிலையை யோசிக்க வேண்டும். இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. பாம்பு விழுந்தவுடன் தீண்டியதா? இல்லை கொஞ்ச நேரம் கழிந்ததா? விழுந்தவுடன் தீண்டியது என்றால் மூன்றாம் நபர் ஈட்டுத்தொகைத் தந்தாக வேண்டும். கொஞ்ச நேரம் கழிந்து என்றால் இவரும் குற்றமற்றவராக ஆகிவிடுகின்றார். விழுந்தவுடன் தூக்கி வீசாமல் நான்காவது நபர் அலட்சியமாக இருந்தது ஏன் என்ற கேள்வி எஞ்கின்றது?

  

இமாம் அவர்களின் கருத்தை ஒருமித்து அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லி

  

ஷீஆக்கள்

 

ஒருமுறை ஷீஆக்களுக்கும், சன்னிகளுக்கும் மத்தியில் விவாதம் ஒன்று நடைபெற இருந்தது யார் உண்மையான முஸ்லிம்கள் என்று... குறித்த நேரத்தில் ஷீஆக்களுடைய பெரும் பெரும் அறிஞர்கள் எல்லாம் சமூகமளித்திருந்தனர், ஆனால் சன்னிகள் சார்பில் எவரும் வந்திருக்கவில்லை.

 

கொஞ்சம் தாமதித்து இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் மாத்திரம் வந்தார்கள்.  சபையருகில் வந்ததும் தமது செருப்பை எடுத்து அக்குளில் வைத்துகொண்டார்கள். இதை கண்ட ஷீஆக்கள், ஏன் செருப்பை அக்குளில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

 

இமாம் அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷீஆக்கள் செருப்பை திருடுபவர்களாக இருந்தார்கள் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான் நான் எனது செருப்பை அக்குளில் வைத்தேன்என்று கூறினார்கள்.

 

இதை கேட்ட ஷீஆ அறிஞர்கள், “நபியவர்கள் காலத்தில் ஷீஆக்கள் இருக்கவில்லையேஎன்று கூறினார்கள். உடனே இமாம் அவர்கள், “அப்படியானால் விவாதம் இப்போதே முடிந்து விட்டது என்று கூறியவாறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷீஆக்கள் இல்லையென்றால் உங்களுடைய மதத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்என்று கேட்டார்கள்.

 

இன்றுவரை ஷீஆக்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.


மனமாற்றமடைந்தனர்

 

ஞானி ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களிடம் முஃதஜிஸிலாக்கள் என்ற ஒரு பிரிவினர்  "இவ்வுலகிலும் மறுஉலகிலும் அல்லாஹ்வை பார்க்க இயலாது" என்ற தங்களின் கொள்கையை முன்வைத்து வாதிட வந்தனர்.

  

அன்னார் அவர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "இம்மையிலோ மறுமையிலோ அல்லாஹ்வை கண்களால் பார்க்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை" என்றார்கள்.

  

அதற்கு அன்னார், "நான் கேட்பதற்கு அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை சொல்லுங்கள். அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று உங்களின் உள்ளம் விரும்புகிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்! எங்கள் உள்ளம் விரும்புகிறது" என்றார்கள்.

  

அன்னார், "பார்க்க முடியாத ஒன்றை உள்ளம் விரும்புமா?" என்று வினவினார்கள். "வாசனையை நுகரத்தான் உள்ளம் விரும்பும். காற்றை சுவாசிக்க தான் உள்ளம் ஆசைப்படும். ருசியை சுவைக்கத்தான் உள்ளம் விரும்பும். இவற்றை எந்த மனிதனும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டான். அவன் இதயத்தில் அந்த ஆசையே எழும்பாது. ஏனென்றால் அவற்றை கண்ணால் காண முடியாது. எதை பார்க்க முடியுமோ அதை பார்க்கத்தான் இதயம் விரும்பும். எனவே, அல்லாஹ்வை பார்க்க முடியும் என்று உங்கள் இதயம் நம்புகிறது. எனவேதான் அதை விரும்புகிறதுஎன்றார்கள்.

  

தொடர்ந்து, “நம் இதயம் விரும்புகிற ஒன்றை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( فَإِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ الْقَمَرَ لَيْلَةَ الْبَدْرِ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ ) "(மறுமை நாளில்) பௌர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதைப் போல் நீங்கள் அல்லாஹ்வை காண்பீர்கள். அவனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். (நூல்:- புகாரீ-806, முஸ்லிம் -299,திர்மிதீ-2247)  என்று இதயம் நம்புவதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.

  

இந்த பதிலை கேட்டு திகைத்து போன முஃதஸிலாக்களின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. பலர் அந்த இடத்திலேயே பாவமன்னிப்புக் கோரி மனமாற்றமடைந்தனர். நூல்:- முஃஜிஸா கியாஹே

 

பல நூறு அறிவியல் ஆதாரங்கள் ஏற்படுத்தாத மனமாற்றத்தை, ஒரு ஞானியின் கேள்விக் கணைக்கள் எதிர் கொள்கையுடையவர்களின் இதயத்தை துளைத்தெடுத்து மனமாற்றத்தை உருவாக்கியது.


பாக்கியத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஹள்ரத் ஷேக் ஆதம் (ரஹ்) அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ கூட்டத்தை கடந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒரு பாதிரியார், முஹம்மது நபி தன்னுடைய மகள் ஃபாத்திமாவைப் பார்த்து, "உன்னை என்னால் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார். ஏசுவோ பாவிகளைப் பார்த்து, "என்னிடம் வாருங்கள்; நான் மன்னிப்புத் தருகிறேன்" என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று"  பேசினார்.

 

இதைச் செவியுற்ற ஹள்ரத் அவர்கள் நேராக கூட்டத்திற்கு உள்ளே சென்று, "நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்கள். ஹளரத்தின் தோற்றத்தைப் பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹள்ரத் அவர்கள் மேடையேறி, "ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து, மகளே! நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்றெண்ணி, நோயைக் கண்டு பயப்படாமல் இருந்து விடாதே! என்கிறார். இன்னொரு மருத்துவர், "தன் மகளைப் பார்த்து மகளே! உன் தந்தையாகிய நான் ஒரு மருத்துவர். எனவேநீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! எதற்கும் பயப்படாதே உன்னை நான் காப்பாற்றிவிடுவேன்என்கிறார். இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டால், முதல் மருத்துவரைத்தானே சிறந்தவர் என்போம். இதில் முஹம்மத் நபி அவர்கள் முதல் மருத்துவரைப் போன்றுத்தான் தன் மகளிடம் கூறினார்கள்" என்று ஹள்ரத் கூறியதும் கிருஸ்தவர்கள் வாயடைத்துப் போயினர். (ஹள்ரத் H.கமாலுத்தீன் ரஹ் சொன்னதாக வெள்ளிமேடை எனும் இணையத்தளத்தில் இருந்து)

 

1977 வேலூர் கோட்டை மைதானத்தில் தி.க இயக்கத்தினரோடு ஒரு கூட்டத்தில் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய ஹள்ரத் ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் பெரியார் தாசன் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் கண்களுக்குத் தெரிகிறாரா? கண்களுக்குத் தெரியாததை எப்படி நம்புவது? எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று பேசினார்.

 

அவரைத் தொடர்ந்து ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள், "கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்புவாயா? அதுவும் இந்தக் காலத்தில், இரயிலில் போகிறபோது எதிரே மரங்கள் ஓடுவதாகத் தெரிகிறது. சும்மா நிற்கிற இரயில் வண்டி ஓடுவதாகத் தெரிகிறது. அதை அப்படியே நீ நம்பி விடுவாயா? எதையும் தீர விசாரித்தால் தான் உண்மை என்கிறாயே. தன்னுடைய பிறப்பையும் அப்படி தீர விசாரித்துத்தான் ஏற்பாயா? அம்மாவை நம்பாவிட்டால் வரலாறு நாற்றமடித்து விடாதா?" என்று கர்ஜித்தார்கள். அந்தக் கேள்வியில் தி.க. வினர் எந்தப் பதிலும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர். (வெள்ளிமேடை எனும் இணையத்தளத்தில் இருந்து)

   

ஷைத்தானைக் கெடுத்தவன் யார்?

 

மௌலானா மஹ்மூது ஹசன் கங்கோஹி (ரஹ்) அவர்கள் முன்னிலையில் ஒரு மனிதர் "ஷைத்தான் அவனைக் கெடுத்துவிட்டான் இவனைக் கெடுத்து விட்டான் என்று மக்கள் கூறுகிறார்கள். சரி! ஷைத்தானைக் கெடுத்தவன் யார்? சொல்லுங்கள் என்று வினவினார். மௌலானா அவர்கள் அவரிடம் சரி! வீட்டில் ரொட்டி, தேனீர், சால்னா தயாரிக்கப்படும் தானே! ரொட்டியை இரும்புச் சட்டியில் சுட்டப்படுகிறது. ரொட்டியை சூடாக்குவது எது? என்று வினவினார்கள். அவர் நெருப்பு என்றார். சரி! பாலை சூடாக்குவது எது? நெருப்பு. தேனீரை சூடாக்குவது எது? நெருப்பு. இறைச்சியை சூடாக்குவது எது? நெருப்பு. இவ்வாறு கேள்வி பதில் தொடர்ந்தது.

 

பிறகு மௌலானா அவர்கள் நெருப்பை சூடாக்கியது யார்? என்று வினவினார்கள். அவர் அது தானாகவே சூடாகி விட்டது என்றார்.

 

அதற்கு மௌலானா அவர்கள் "இதுதான் உண்மை. ஷைத்தானை யாரும் வழிகெடுக்கவில்லை. அவன் தன்னைத்தானே எடுத்துக் கொண்டான். அவனை யாரும் வழிகெடுக்க வேண்டிய தேவை இல்லை" என்று நெத்தியடியாக பதிலளித்தார்கள்.   நூல்:- குத்பாத் மஹ்மூது

 

 காதியானி

 

மௌலானா மஹ்மூது ஹசன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு காதியானியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவன் "மிர்ஸா குலாம் அஹமது நபியாக இருந்தார்" என்று கூறினான். அவருக்கு வஹீ (எனும் இறைச் செய்தி) வந்து கொண்டிருந்தது. வஹீ நபி எனும் இறைத்தூதரிடம் தான் வரும்! வேறு யாரிடமும் வராது என்றான்.

 

நான், "பெண் எப்போதாவது நபியானதுண்டா?" என்று வினவினேன். அவன், “பெண் யாரும் நபியாக ஆனதில்லை” என்றான். நான், திருக்குர்ஆனில் நாம் மூசா (அலை) வின் தாயாருக்கு வஹீ அறிவித்தோம் (28:07)  என்றுள்ளது. பெண் நபியாக முடியாது. ஆனால் நபி அல்லாதவருக்கும் வஹீ வந்துள்ளதே! வஹீ வருவதற்கு நபியாக இருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்? ஆணாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. பெண்ணிடமும் வஹீ வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

  

ஏனெனில் திருக்குர்ஆனில் உமது இறைவன் தேனீக்களுக்கு அனுப்பினான் (16:68)  என்றுள்ளது. எனவே, தேனீயும் நபி என்று சொல்லலாமா? மேலும் உயிரினமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

 

சிலவேளை உயிரற்ற பொருளிடமும் வஹீ வருகிறது. ‘அந்நாளில் அது (பூமி) தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் தனக்கு கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும்’. (99:4,5) பூமியிடம் வஹீ வருகின்றது என்றால் அதுவும் நபியா?” என்றேன்.

  

அப்போது அவன்  "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வஹீ வரலாமா?" என்று வினவினான். அதற்கு நான் சொன்னேன் ஆம்! திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களுக்கு வஹீ கொண்டு வருகின்றனர். (6:121)

 

நபித்துவப் பிரச்சனை, கொள்கை விசுவாச சம்பந்தமானவகைகளில் உள்ளது என்பதால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் தேவை. அவை பரிசுத்த திருக்குர்ஆனிலிருந்து இருக்க வேண்டும் எனவே எல்லாவற்றையுமே திருக்குர்ஆனிலிருந்து சமர்ப்பித்து கொண்டிருக்கிறேன்.  நூல்:- குத்பாத் மஹ்மூது

 

எனவே, வஹீ வருகிறது என்பதற்காக அவர் நபியாக ஆகிவிட முடியாது. வரும் வஹீ யாரிடமிருந்து யாருக்கு என்ன செய்தி வருகிறது என்று கவனித்துத்தான் அவர் நபியா? அல்லது அவன் வேறு மாதிரியானவனா? என்று தீர்மானிக்க முடியும். எனவே தனக்கு வஹீ வருகிறது என்பதால், தான் நபி என்று வாதிடுபவனெல்லாம் நபியாகிவிட முடியாது என (நெத்தியடியாக) பதிலளித்தார்கள்.

 

பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின்  பேராசிரியர்கள்

 

பாக்கியத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஹள்ரத் ஷேக் ஆதம் (ரஹ்) அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ கூட்டத்தை கடந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒரு பாதிரியார், முஹம்மது நபி தன்னுடைய மகள் ஃபாத்திமாவைப் பார்த்து, "உன்னை என்னால் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார். ஏசுவோ பாவிகளைப் பார்த்து, "என்னிடம் வாருங்கள்; நான் மன்னிப்புத் தருகிறேன்" என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று"  பேசினார்.

 

இதைச் செவியுற்ற ஹள்ரத் அவர்கள் நேராக கூட்டத்திற்கு உள்ளே சென்று, "நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்கள். ஹளரத்தின் தோற்றத்தைப் பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹள்ரத் அவர்கள் மேடையேறி, "ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து, மகளே! நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்றெண்ணி, நோயைக் கண்டு பயப்படாமல் இருந்து விடாதே! என்கிறார். இன்னொரு மருத்துவர், "தன் மகளைப் பார்த்து மகளே! உன் தந்தையாகிய நான் ஒரு மருத்துவர். எனவேநீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! எதற்கும் பயப்படாதே உன்னை நான் காப்பாற்றிவிடுவேன்என்கிறார். இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டால், முதல் மருத்துவரைத்தானே சிறந்தவர் என்போம். இதில் முஹம்மத் நபி அவர்கள் முதல் மருத்துவரைப் போன்றுத்தான் தன் மகளிடம் கூறினார்கள்" என்று ஹள்ரத் கூறியதும் கிருஸ்தவர்கள் வாயடைத்துப் போயினர். (ஹள்ரத் H.கமாலுத்தீன் ரஹ் சொன்னதாக வெள்ளிமேடை என்ற வலைத்தளத்தில் இருந்து)

  

1977 வேலூர் கோட்டை மைதானத்தில் தி.க. இயக்கத்தினரோடு ஒரு கூட்டத்தில் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய ஹள்ரத் ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் பெரியார் தாசன் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் கண்களுக்குத் தெரிகிறாரா? கண்களுக்குத் தெரியாததை எப்படி நம்புவது? எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று பேசினார்.

  

அவரைத் தொடர்ந்து ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள், "கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்புவாயா? அதுவும் இந்தக் காலத்தில், இரயிலில் போகிறபோது எதிரே மரங்கள் ஓடுவதாகத் தெரிகிறது. சும்மா நிற்கிற இரயில் வண்டி ஓடுவதாகத் தெரிகிறது. அதை அப்படியே நீ நம்பி விடுவாயா? எதையும் தீர விசாரித்தால் தான் உண்மை என்கிறாயே. தன்னுடைய பிறப்பையும் அப்படி தீர விசாரித்துத்தான் ஏற்பாயா? அம்மாவை நம்பாவிட்டால் வரலாறு நாற்றமடித்து விடாதா?" என்று கர்ஜித்தார்கள். அந்தக் கேள்வியில் தி.க. வினர் எந்தப் பதிலும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர். (வெள்ளிமேடை என்ற வலைத்தளத்தில் இருந்து)

  

புரிய வைத்தல்

  

ஒருமுறை தொழுகை நடக்கும் போது ஒசை எழுப்பி ஊர்வலம் சென்றார்கள். அதை தடுக்க கோரி நீதிமன்றம் சென்றனர். அதை விசாரித்த நீதிபதி, “ஒலி எழுப்புவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்கள் இறைவனை ஒருமித்து பக்தியில் மூழ்கி வணங்க வேண்டியது தானே. வெளியில் என்ன சத்தம் என்று காதை நீட்டுகிறீர்கள் அது தொந்தரவு என்றால் இறை வணக்கத்தை ஒர்மையில் செய்யவில்லை என்றே பொருளாகும்எனக் கூறினார்.

  

உடனே அந்த வழக்கை வாதாடிய வக்கீல் அப்துல் கலாம் ஆசாத் (ரஹ்) அவர்கள் அதை கவனிக்காமல் மேஜையில் தாளம் போட்டு ஒசை எழுப்பி கொண்டே இருந்தார்கள். உடனே  நீதிபதி அவர்கள் வக்கீலை கூப்பிட்டு, “நீதிமன்றத்தை அவமதிக்கும் உங்கள் செயல் கண்டிக்கதக்கதுஎன்றார். அப்போது வக்கில் அமைதியாக எழுந்து, “மன்னிக்கவும் உங்கள் கவனம் முழுவதும் தீர்ப்பை வாசிப்பதில் இருக்கும் போது, நான் எழுப்பும் இந்த ஒலி எப்படி உங்கள் கவனத்தை சிதைக்கிறதுஎன்றார்கள். உடனே நீதிபதி தவறை உணர்ந்து பள்ளிவாசல் அருகே ஒலி எழுப்புவது கண்டிக்கத்தக்கதுஎன தீர்ப்பளித்தார்.

  

யார் தனிநாடு பெறத் தகுதியானவர்?

 

1949-ல் ஐக்கிய நாடுகள் சபையில் லிபியர்களின் தனி நாடு கோரிக்கை பற்றிய விவாதம் நடந்தபோது, ஃப்ரான்ஸ் அதிபர் ஃபான்சான் ஒரியோல், "நீங்கள் அறிவீனர்கள். தனி நாடு பெறுவதற்கெல்லாம் தகுதியில்லாதவர்கள்" என்றார்.

 

அவருக்கு மறுப்புத் தெரிவித்த ஷைக் அப்துல் ஹமீது அப்பார், "இத்தாலிய அடக்குமுறையாளர்களுடன் நாங்கள் 20 ஆண்டுகள் போரிட்டுள்ளோம். ஆனால் மூன்றே நாட்களில் உங்களை ஹிட்லர்  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். நம்மில் யார் தனிநாடு பெறத் தகுதியானவர்?" என்றார். அப்போது ஃபிரான்ஸ் அதிபர் வாயடைத்துப்போனார்.

  

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?

  

வலைத்தளத்தில் வாசித்தவை: இங்கிலாந்தில் இரு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர் அவர்களில் ஒருவர் முஸ்லிம். மற்றொருவர் வேறு மதத்தைச் சார்ந்தவர். அப்போது பிற மதத்தைச் சார்ந்த நண்பர், “இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதுஎன்று ஒருவர் கூறினார்.

  

முஸ்லிம் நண்பர், “எதை வைத்து சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பிற மதத்தைச் சார்ந்த நண்பர், “சுதந்திரமாக ஆடை அணியமுடிவதில்லை. சகஜமாக மற்ற ஆண்களிடம் பேச விடுவதில்லைஎன்று கூறினார்.

  

முஸ்லிம் நண்பர், “இந்நாட்டு மகாராணி அறைகுறை ஆடையுடன் வீதியில் உலா வருவாரா? இந்நாட்டு மகாராணி என்னைப் போன்றோரிடம் சகஜமாக பேசுவாரா?” என்று அவர் கேட்க, அவர், அதெப்படி முடியும் அவர் இந்நாட்டு மகாராணி என்று கூறினார்.  முஸ்லிம் நண்பர், “இஸ்லாத்தைப் பொருத்தவரை எல்லா பெண்களும் மகாராணிகள் தான்என்றார்.

  

ஒரு நேர்முகத் தேர்வில் ஒரு நபரிடம், "பசிபிக் சமுத்திரத்தில் இருந்து எத்தனை வாளி தண்ணீர் எடுக்கலாம்?" என்று கேட்டனர். "அது வாளியின் அளவைப் பொறுத்தது" என்று சற்றென்று விடை வந்தது. ஏகப்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

  

ஒரு நபரிடம் "நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள்." என்று சொல்லப்பட்டது. அதற்கு அவர், "நாம் இருவரும் ஒரே மாதிரி நம்மைப் பற்றிய அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறோம்" (Feeling is mutual)" என்றார். அவர் திறன் பாராட்டப்பட்டது.

 

மேற்கண்ட மேன்மக்கள், தம்மிடம் கேள்வி கேட்டவர்களுக்கு நெத்தியடியான பதில்களை தந்தார்கள். அந்த பதில்கள் மூலம் திருந்தியவர்களும் உண்டு. திருந்தாதவர்களும் உண்டு. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை சற்று யோசிக்க வைத்தார்கள் என்பதே பேருண்மையாகும்.

 

மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற, பல நேரங்களில் அவனுக்கு சமயோகித அறிவு தேவைப்படுகிறது. இறைத்தூதர்கள் மற்றும் அவர்கள் வழிவந்த நல்லோர்கள் பலரும் தமது சமயோகித அறிவைக் கொண்டு பற்பல சாதனைகள் புரிந்துள்ளார்கள்.  அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள். எனவே, அல்லாஹ் நமக்கு அது போன்ற அறிவு தெளிவை தருவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. அல்ஹம்து லில்லாஹ் அருமையான பதிவு ஹஜ்ரத்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...