திருநங்கைகள்
وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ
فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ
اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ
خُسْرَانًا مُبِينًا
அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் அல்லாஹ்விடம் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். திருக்குர்ஆன் 4:119
2014 ஏப்ரம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள்.
பெண்தன்மை மிகுந்த பேடிகளையே அலிகள், அரவாணிகள், திருநங்கையர், மூன்றாம் பாலினர் எனக் குறிப்பிடுகின்றனர். இயற்கையிலேயே பெண்தன்மை மிகுந்து காணப்படுகின்ற இத்தகைய ஆடவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
பெண்தன்மை மிகுந்தாலும் இவர்களை ஆடவர் என்ற கண்ணோட்டத்திலேயே இஸ்லாம் பார்க்கிறது. இவர்களை இளப்பமாக பார்க்காமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் இத்தகைய தன்மையுடையோர் மக்களோடு கலந்து வாழலாம். அதே நேரத்தில் ஆண்களோடு கலந்து அவர்களை வழிதவறச் செய்வோர் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர். இத்தகையவர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றலாம். நாடு கடத்தலாம்.
சாபத்திற்குரியோர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், ( أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ ) “அவர்களில் அரவாணிகளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள்.
மேலும், அவ்வாறு அண்ணலார் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5886, அபூதாவூத்-4282, இப்னுமாஜா-1893
இறைவன் படைப்பில் ஆண், பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.
ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் குறைபாடு உள்ள ஆண்களேயாவர். இஸ்லாம் இவர்களை ஆண்களாகவே கருத வேண்டும் என்று வழிகாட்டுகிறது. இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும், நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இன்றைக்கு அரவாணிகள் செயற்கையாக அறுவை சிகிச்சை, ஊசி போன்றவற்றையும் நவீன கருவிகளையும், மருந்துகளையும் பயன்படுத்தி தங்களைப் பெண்களைப் போல் மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண்கள் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
நடை, உடை, அணிகலன்கள், பாவனை ஆகியவற்றில் ஆண்கள் பெண்களைப் போன்று பெண்கள் ஆண்களைப் போன்று நடந்து கொள்வது இயற்கைக்கு எதிரான செயலாகும். குறுகிய நோக்கத்திற்காக இயற்கை அமைப்பையே மாற்றிக்கொள்ளவும் தயங்காத ஒருவர் எதையும் செய்யத் துணிந்தவராகவே இருப்பார். ஆகவே, இத்தகையவர்கள் சாபத்திற்குரியவர்களாகிறார்கள்.
திருநங்கைகள் இரு வகைப்படுவர். இயற்கையாகவே பெண்களைப் போன்ற உடலமைப்பும் நடத்தையையும் உள்ளவர்கள் ஒரு வகையினர். இயற்கையாக இல்லாமல் பெண்களைப் போன்று செயற்கையாக நடந்து கொள்பவர்கள் மற்றொரு வகையினர். முதல் வகையினர் பழிப்புக்குரியவர்கள் அல்லர். இரண்டாவது வகையினர் இறைவனின் சாபத்திற்குரியவர்கள். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா
வாழ்வாதாரம் திரட்ட
ஸஃப்வான் பின் உமைய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களிடம் அம்ர் பின் முர்ரா (எனும் திருநங்கை ஒருவர்) வந்து, "நாயகமே! (என்னை திருநங்கையாக்கி) அல்லாஹ் என்மீது வறுமையை எழுதிவிட்டான். நான் என் கையால் அடிக்கின்ற கஞ்சிராவின் மூலமே எனக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன். எனவே, (விபச்சாரம், ஒருபால் உறவு போன்ற) மானக்கேடான செயல்களில் ஈடுபடாமல் (வாழ்வாதாரம் திரட்ட) பாட்டுப் பாட (மட்டும்) எனக்கு நீங்கள் அனுமதி வழங்குங்கள்" என்று கேட்டார்.
அதற்கு அண்ணலார், ( لاَ آذَنُ لَكَ وَلاَ كَرَامَةَ وَلاَ نُعْمَةَ عَيْنٍ كَذَبْتَ أَىْ عَدُوَّ اللَّهِ ) "நான் உனக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். (இதற்கு அனுமதியளித்து) உனக்கு மகிழ்ச்சியளிக்கப்போவதுமில்லை. அல்லாஹ்வின் விரோதியே! அல்லாஹ் உனக்கு ஆகுமான நல்லுணவை வழங்கியிருக்க, (என்மீது வறுமையை விதித்து விட்டான் என்று கூறி) நீ பொய் சொல்லுகிறாய்.
( لَقَدْ رَزَقَكَ اللَّهُ طَيِّبًا حَلاَلاً فَاخْتَرْتَ مَا حَرَّمَ اللَّهُ عَلَيْكَ مِنْ رِزْقِهِ مَكَانَ مَا أَحَلَّ اللَّهُ عَزَّ وَجَلَّ لَكَ مِنْ حَلاَلِهِ . وَلَوْ كُنْتُ تَقَدَّمْتُ إِلَيْكَ لَفَعَلْتُ بِكَ وَفَعَلْتُ ) அல்லாஹ் உனக்கு ஆகுமாக்கிய வாழ்வாதாரத்திற்குப் பதிலாக அல்லாஹ் உனக்குத் தடைசெய்த வாழ்வாதாரத்தை நீ தேர்வு செய்துள்ளாய். நான் முன்பே (இவ்வாறு செய்ய வேண்டாம் என) தடை விதித்திருந்தால் (இப்போது) உனக்கு நான், இவ்வாறு இவ்வாறு (கடுமையான தண்டனை) வழங்கியிருப்பேன். (முதல் தடவை என்பதால் மன்னித்துவிட்டேன்).
( قُمْ عَنِّي وَتُبْ إِلَى اللَّهِ أَمَا إِنَّكَ إِنْ فَعَلْتَ بَعْدَ التَّقْدِمَةِ إِلَيْكَ ضَرَبْتُكَ ضَرْبًا وَجِيعًا ) இங்கிருந்து எழுந்து செல். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரு. நான் தடைவிதித்த பிறகும் இதைச் செய்ய முற்பட்டால் நான் உன்னை வேதனைப்படுத்தும் விதமாக கடுமையான முறையில் தண்டிப்பேன்" என்று கூறினார்கள். அதன்பின் அவர் திரும்பி சென்ற போது நபியவர்கள், ( هَؤُلاَءِ الْعُصَاةُ ) "இவர்கள் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்கள்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-2603
இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை. இவர்கள் தங்கள் முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.
அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்றை அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும்போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால், அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும், வசை பாடுவதும் இவர்களின் தொழில்.
இவர்களின் இந்த இழிசெயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள். இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப்படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
இவர்களில் சிலர் சுயமாக உழைத்து சம்பாதிக்கிறார்கள். மேலும், சிலர் நல்ல முறையில் படித்து அரசுப்பணிகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதியில்லை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் திருநங்கை ஒருவர் அழைத்துவரப்பட்டார். அவர் தம்முடைய கைகளிலும், கால்களிலும் மருதாணி சாயம் பூசியிருந்தார். அப்போது நபியவர்கள், ( مَا بَالُ هَذَا ) "இவர் தொடர்பான செய்தி என்ன?" என்று கேட்டார்கள். ( يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ ) "நாயகமே! இவர் தன்னைப் பெண்ணைப் போன்று ஒப்பனை செய்து கொள்கிறார்" என்று சொல்லப்பட்டது. அப்போது நபியவர்கள் இட்ட கட்டளைக்கிணங்க, அவர் 'நகீஉ' எனும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.
அந்நிலையில் மக்கள், ( يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ ) "நாயகமே! அவரை நாங்கள் கொல்ல வேண்டாமா?" என்று வினவினர். அதற்கு நபியவர்கள், ( إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ ) "தொழுகையாளிகளைக் கொல்ல எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4280
உம்மு சல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) என்னிடம் ('ஹுத்' எனும்) திருநங்கை ஒருவர் என் அருகில் இருந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அந்த திருநங்கை என் சகோதரரிடம், ( يَا عَبْدَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا فَعَلَيْكَ بِابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ ) "அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவே! "(முஸ்லிம்கள் முற்றுகையிட்டுள்ள) தாயிஃப் நகர் மீது நாளை (உங்களுக்கு) அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உமக்கு நான் அடையாளம் காட்டுவேன். (அவளை மணந்துக்கொள்!) அவள் முன்பக்கம் நான்கு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைச் செவியுற்ற அண்ணலார், ( لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ ) "(திருநங்கைகளான) இவர்கள் (அந்நியப் பெண்களான) உங்களிடம் வரவேண்டாம். (இத்தகைய திருநங்கைகள் பெண்களாகிய உங்களிடம் வருவதை அனுமதிக்காதீர்கள்)" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4324, முஸ்லிம்-4395, அபூதாவூத்-4281, இப்னுமாஜா-2604, முஸ்னது அஹ்மத்-25,285, முஅத்தா மாலிக்-1259
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) திருநங்கை ஒருவர் வருவார். அவர் பாலுறவு வேட்கை இல்லாதவர்களில் ஒருவர் என்றே கருதி வந்தார்கள். ஒருநாள் அவர் அண்ணலாரின் துணைவியர் ஒருவரிடம் இருந்தபோது, அங்கு அண்ணலார் வந்தார்கள். அந்த திருநங்கை ஒரு பெண்ணைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். அப்போது அண்ணலார், ( أَلاَ أَرَى هَذَا يَعْرِفُ مَا هَا هُنَا لاَ يَدْخُلَنَّ عَلَيْكُنَّ ) "இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் அறிவார் என்று நான் ஏன் கருதக்கூடாது? (திருநங்கைகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்" என்று கூறினார்கள். எனவே, அவரை(ப் பெண்களை விட்டு)த் தடுத்துவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-4396
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அன்ஜஷா எனும் கருப்பு நிற அடிமை அரவாணியை வெளியேற்றினார்கள். இவர் பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார். நூல்:- பத்ஹுல் பாரீ
ஆணோ பெண்ணோ இல்லாத திருநங்கைகள், பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல அனுமதி இல்லை.
அதாவது அவளுக்கு வயிற்றுச் சதையில் நான்கு மடிப்புகள் உண்டு. முன் பக்கம் பார்த்தால் நான்கு மடிப்புகள் தெரியும். அந்த நான்கு மடிப்புகளில் ஓரங்கள் இரு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக தெரியும். ஆக, அந்தப் பெண்ணின் சதைப்பிடிப்புள்ள உடலழகை அந்த வர்ணித்தார், எனவேதான், இனிமேல் அவர் பெண்கள் உள்ள பகுதிக்கு வரக்கூடாது என அண்ணலார் தடை விதித்தார்கள்.
அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின் குடும்பப் பெண்கள் உள்ள இடத்திற்கு ஆணும் பெண்ணும் இல்லாத ஓர் திருநங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். பெண்கள் மீது அவருக்கு ஆசை இருக்காது என்று கருதிய அண்ணலார் அவரை அனுமதித்தார்கள். பின்னர் பெண்களின் அழகு பற்றியும், அங்க அடையாளங்கள் பற்றியும் அவர் வர்ணித்ததை ஒருநாள் கண்ட அண்ணலார், பெண்கள் உள்ள இடத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கட்டளையிட்டார்கள்.
இத்தகைய அரவாணிகளை வீடுகளுக்குள் அனுமதித்தால் அவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவும் குடும்ப உறுப்பினர்களைத் தீய வழியில் செலுத்தவும் அதிக வாய்ப்புண்டு. எனவேதான், அவர்களை வெளியேற்றி ஒதுக்குப்புறங்களில் தங்க வைத்துவிட வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் மூன்றாம் பாலினம் என்ற ஒன்று இல்லை. இவர்கள், தங்களை ஆணுமல்லாத பெண்ணுமல்லாத மூன்றாவது பாலினர் என்று சொல்லிக்கொண்டாலும், அது உண்மையில்லை. அரவாணிகளும் ஆண்கள் தான். குறைபாடுள்ள ஆண்கள் அவ்வளவுதான். திருமணம் செய்வதைத் தவிர்த்துக் கொண்டு எல்லா வகையிலும் ஆண்களைப் போலவே அவர்கள் நடந்து கொள்வது கடமையாகும்.
இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள். பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள். நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள். ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத்தான் இருக்கும்.
அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள். தற்போது அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை, கல்கத்தா, டெல்லி, சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.
இது தவிர மலேசியா, சிங்கப்பூர், இஸ்ரேல், வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவாணிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுவர். இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் இந்தியா 128 வது நாடாக இடம்பிடித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் என்ற ஊரில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கூத்தாண்டவர் திருவிழாவும், அரவாணிகளின் அசிங்கங்களும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் இந்த கேடு கெட்டவர்களின் அழகிப்போட்டியும் நடைபெறும் (அழகிப் போட்டியென்பதே கேடு கெட்ட செயல்தான் என்பதை புரிந்து கொள்ளவும்)
இவர்களின் வருடாந்திர விழாவில் யார் அழகியாக தேர்ந்தெடுக்கப்படுவாரோ அவருக்கு மிஸ் கூவாகம் என்ற பட்டம்(?)வழங்கப்படும். இந்த விழா முழுக்க முழுக்க பெண் தோற்றத்தை தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஆண்களால் தான் நடத்தப்படுகிறதே தவிர, இவர்கள் ஒன்றும் மூன்றாம் பாலினம் அல்ல. என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
சட்டத்தின் பார்வை
இஸ்லாத்தின் பார்வையில், ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் உள்ள, அல்லது இரண்டுமே இல்லாத மனிதரைத்தான் “அலி” ( الخنثى குன்ஸா) என்று சொல்லப்படும்
இதில் ஓர் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். அதாவது ஒருவர் பருவ வயதை அடைந்தபிறகு தான் அவர் “அரவாணியா? இல்லையா?” என்று தீர்மானிக்கவே முடியும். பருவமடைவதற்கு முன்பு ஆண் குறியும் பெண் குறியும் இருப்பதால் ஆண் என்றோ பெண் என்றோ தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்படும். பருவம் அடைந்தபிறகு பெரும்பாலும் ஆண், அல்லது பெண் என்பது இயல்புகளாலும் உடலமைப்பாலும் தெரிந்துவிடும்.
மார்பு பெரிதாவது, மாதவிடாய் வருவது, ஆண்மேல் ஈர்ப்பு போன்ற அடையாளங்கள் அவள் ஒரு பெண் என்பதைத் தீர்மானித்துவிடும்.
தாடி மற்றும் மீசை முளைப்பது, பெண்மேல் ஈர்ப்பு, ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவது போன்ற அறிகுறிகள் அவன் ஆண் என்பதற்குச் சான்றுகள்.
இருபாலில் ஒருபால் முடிவாகிவிட்டால், மற்றொரு பாலின் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். இனி ஆணை ஆணாகவும், பெண்ணைப் பெண்ணாகவும் நடத்துவதில் சிக்கலும் இருக்காது. அதுவரை எந்த முடிவுக்கும் வந்துவிடவோ திருமணம் செய்துவைக்கவோ கூடாது
அரவாணிகளில் இன்னொரு வகை உள்ளனர். இவர்களே எண்ணிக்கையில் அதிகம். ஆணுறுப்புடன் மட்டும் பிறக்கும் ஒரு குழந்தை, பருவ வயதை நெருங்க நெருங்க பெண்ணின் குணாதிசயங்களை அடைந்துவிடும். ஆண்மீது ஈர்ப்பு ஏற்படும். பெண்களுடன் இருப்பதையே விரும்பும். இதைத்தான் இன்று ‘திருநங்கை’ என்கின்றனர். இவர்களைத்தான் இஸ்லாத்தின் பார்வையில் ( المخنَّث ) ‘முகன்னஸ்’ என்பர்.
மென்மை, பேச்சு, பார்வை, அசைவு, நடை ஆகியவற்றில் பெண்ணுக்கு ஒப்பாக இருப்பவரே ‘முகன்னஸ்’ ஆவார். ஆணுறுப்போடு பிறந்த ஒருவனுக்கு இந்த மாற்றங்கள் இயற்கையாகவே தோன்றுமானால் அவன் அரவணைக்கப்பட வேண்டியவன்; அனுதாபத்திற்குரியவன்; அது அவனுடைய குற்றமோ குறையோ ஆகாது.
ஆனால், வெகுசிலருக்குப் பருவத்திறகுப் பின்பும் எந்த அறிகுறியும் தூக்கலாக வெளிப்படாமல் சமநிலையில் இருந்துவிடலாம். இத்தகைய அரவாணிகளே சிக்கலானவர்கள். அரபியில் இவர்களையே ( الخنثى المشكل ) “குன்ஸா முஷ்கில்” என்பர்.
ஆண் அல்லது பெண்ணின் பங்குகளில் எது குறைவாக இருக்குமோ அதை இவர்கள் பெறுவார்கள். சொத்துக்குரியவர் இறக்கும்போது அரவாணியின் பால்நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொண்டே அரவாணிக்குப் பங்கு பிரிக்கப்பட வேண்டும் என எகிப்து நாட்டின் கெய்ரோ அஸ்ஹர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள மார்க்கத் தீர்ப்பு கூறுகிறது.
வாரிசுரிமைச் சட்டப்படி இவர்களுக்கு ஆணின் பங்கில் பாதியும், பெண்ணின் பங்கில் பாதியும் வழங்கப்படும் என்று சவூதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் ஷைகு இப்னு பாஸ் (ரஹ்) போன்றோர் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.
பாகப்பிரிவினை
கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் உடைய காலத்தில் மார்க்க அறிஞர் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது ஆண்குறியும், பெண்குறியும் உள்ள ஒருவருக்கு பாகப்பிரிவினை செய்வது எப்படி? என்ற பிரச்சினை எழுந்தது. சிறையிலிருக்கும் ஜாபிர் (ரஹ்) அவர்களிடம் கத்தாதா (ரஹ் ) அவர்கள் சென்று இது குறித்து கேட்டபோது, "என்னை சிறையிலும் அடைத்துவிட்டு என்னிடமே மார்க்கத் தீர்ப்பு கேட்கிறீர்களா?" என்று வினவியவாறே "எதிலிருந்து சிறுநீர் வருகிறதோ அதை வைத்து தீர்மானியுங்கள்" என்று கூறினார்கள்.
இச்செய்தியை கத்தாதா (ரஹ்) அவர்கள் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது அவர் இரண்டிலிருந்தும் சிறுநீர் வந்தால் என்ன செய்வது?" என்று வேறொரு சிக்கலான கேள்வியை எழுப்பினார்கள். கத்தாதா (ரஹ்) அவர்கள் எனக்கு தெரியாது என்று கூறவே, கேள்வி கேட்ட சயீத் பின் முஸய்யப் அவர்களே "எதிலிருந்து சிறுநீர் முந்தி வருகிறதோ அதை வைத்து முடிவு செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார்கள். நூல்:- பைஹகீ
ஆய்வாளர்கள் கூற்று
ஆணுறுப்புடன் பிறந்துவிட்டுப் பின்னர் இயல்பாகவே பெண்ணாக மாறிவிடும் திருநங்கைகளைப் பற்றியே நாம் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும். காரணம், இவர்கள்தான் மக்களோடு மக்களாக வாழ்ந்துவருகின்றனர்.
திருநங்கைகளை 163 நாடுகள் அங்கீகரித்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் திருநங்களைகள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
பிறப்புறுப்பால் ஆண் என்று கருதப்பட்டு, பின்னர் தன்னையும் அறியாமலேயே பெண்ணாக உணர்ந்து, பெண்ணாகவே வாழ முற்படுவோர்தான் உண்மையான திருநங்கைகள். இந்த மாற்றம் இயற்கையாகவே ஏற்படுகிறது என்றும், அதற்கு அறிவியல் பூர்வமான காரணம் உண்டு என்றும் சிலர் கூறுகின்றனர்.
கருப்பையில் கரு உருவாகும்போது ‘குரோமோசோம்கள்’ எனப்படும் நிறமூர்த்தங்கள் அல்லது இனக்கீற்றுகளே சிசுவின் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன.
குரோமோசோம்கள் ஆணில் XYயும் பெண்ணில் XXம் இருக்கும். பெண்ணின் X உடன் ஆணின் Y சேர்ந்தால் (XY) சிசு ஆணாகப் பிறக்கும். பெண்ணின் X உடன் ஆணின் X சேர்ந்தால் (XX) சிசு பெண்ணாகப் பிறக்கும் என்பது நாம் அறிந்த அறிவியல் உண்மை.
ஆனால், மூன்றாவது ஒரு சேர்க்கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. XXY அல்லது XYY சேர்ந்தால், அது மூன்றாவது பாலினமாகப் பிறக்கிறதாம்! முந்தியது பெண்ணுறுப்புடன் பிறந்து ஆணாக மாற வல்லது; பிந்தியது ஆணுறுப்புடன் பிறந்து பெண்ணாக மாற வல்லது. இந்த இரண்டாவது வகையினரே திருநங்கைள் என்பது ஆய்வாளர்களது கணிப்பு.
ஆணுறுப்புடன் பிறக்கும் சிறுவன் ஹார்மோன்கள் சுரக்கும் பருவத்தை, அல்லது 13 வயதை அடையும்போது, உடலில் பெண்மைக்கான குணாதிசயங்களைத் தன்னை அறியாமலேயே உணர்வான். பெண்களைப்போல் பேசுவது, பெண்களைப்போல் நடப்பது, பெண்களுக்கே உரிய ஆசைகள், எண்ணங்கள் மனதிலே அரும்புவது ஆகிய மாற்றங்கள் ஏற்படும். அப்போதுதான் அச்சிறுவனுக்குப் பாலியல் தடுமாற்றம் ஏற்படும். தான் ஆணா? அல்லது பெண்ணா என்று குழப்பம் அடைவான்.
நாள்கள் செல்லச்செல்ல தன்னை முழுவதுமாகப் பெண்ணாகவே தீர்மானித்து, பெண்ணுக்குரிய தன்மைகளோடே நடந்துகொள்வான். பார்ப்பவர்கள் நையாண்டி செய்ய, அவனோ தனக்குள் புழுங்கிக்கொண்டிருப்பான். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், இவன் போன்ற திருநங்கைகள் மட்டுமே!
உண்மையில் இது ஒரு நோய்; ஊனம் என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மற்ற நோயாளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும் எவ்வாறு அணுகுகிறோமோ அவ்வாறே இந்த திருநங்கைகளையும் அணுக வேண்டும்; பரிவுகாட்ட வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.
அறுவை சிகிச்சை
ஆணுறுப்புடன் பிறந்தாலும், அது செயல்பட வேண்டிய பருவ வயது வரும்போது, அது முற்றாகச் செயலிழந்துவிட்டால், வெறும் சிறுநீர் வெளியேறும் குழாயாக மட்டுமே கருதப்பட வேண்டும்; பாலின உறுப்பாகக் கருதப்படாது.
எனவே, கூடுதலான கட்டி ஒன்று உடலில் இருந்தால், அதை அறுவை சிகிச்சைமூலம் அகற்றுவதைப் போன்று அகற்றிவிடலாம். அத்துடன் மறைந்துள்ள பெண்ணுறுப்பை அறுவை சிகிச்சைமூலம் வெளிவரச் செய்யலாம்.
மருத்துவரின் ஆலோசனைப்படியும் அச்சிறுவனின் விருப்பப்படியும் 18 வயதிற்குமேல் பாலியல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், அச்சிறுவன் திருநங்கையாக மாறுவான். மருத்துவ ஆய்வும் இதை உறுதி செய்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இது விஷயத்தில் எகிப்து நாட்டின் தாருல் இஃப்தா அளித்துள்ள மார்க்கத் தீர்ப்பு: ஆணுறுப்புடன் பிறந்த சிறுவன் பருவம் அடைகின்றபோது ஹார்மோன் மாற்றத்தின் விளைவால் பெண்ணின் குணாதிசயங்களை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை இயன்றவரை மாற்ற முயலுமாறு சொல்ல வேண்டும்.
மாற்றிக்கொள்ளவே முடியாத அளவுக்கு இயல்பாகவே இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது தீர்க்கமாகத் தெரியும்பட்சத்தில், நம்பிக்கையான மருத்துவரிடம் ஆலோசனை செய்து அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மருத்துவப் பரிசோதனையில் அவை இயல்பான மாற்றங்கள்தான் என்பது முடிவாகும்போது, அது நோய் அல்லது ஊனம் என்பது இறுதியாகிவிடும். அப்போது பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.
ஆனால், ஆணாகப் பிறந்த சிலர் வேண்டுமேன்றே செயற்கையாகப் பெண்ணைப்போல் நடந்துகொள்வதும், ஆணுறுப்பை அகற்றிவிடுவதும் உண்டு. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
ஆகவே, இஸ்லாத்தின் பார்வையில், ஆண்-பெண் என்ற இரு பாலினரே உலகத்தில் உள்ளனர். மூன்றாம் பாலினர் என்பது கிடையாது. அவர்கள் ஆண் அல்லது பெண் இனத்தில் சேர்ந்து விடுவர்.
பேரருளாளன் அல்லாஹுத்தஆலா, உலகில் நடைபெறும் குழப்பங்களில் இருந்து நம்மையும், நம்முடைய சந்ததியினரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951
No comments:
Post a Comment