Search This Blog

Sunday, 1 November 2020

ஒன்றுக்கு பத்து

 

ஒன்றுக்கு பத்து


قال الله تعالي : إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

 

قال رسول الله صلي الله عليه وسلم :  مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ

 

அகில உலக தலைவர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்புபாசம்பற்று கொண்டவர் தம்முடைய ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த அண்ணலார் மீது சலவாத்து சொல்வதே சிறந்த உபகரணம் ஆகும்.

 

எங்கள் இறைவா! அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இரவும்பகலும் பல சிரமங்களைத் தாங்கி இஸ்லாத்தின் பேரொளியை எங்கள்வரை கொண்டு சேர்த்துள்ளார்கள். நாங்கள் நேர்வழிப்பெற்று அதன்படி வாழ பெரிதும் பாடுபட்டுள்ளார்கள். ஆகவே, அவர்கள் செய்த இந்த ஈடு இணையற்ற கொடைக்கு எங்களால் கைமாறு எதனையும் செய்ய இயலாது. எனவே, “இறைவா! உன்னிடம் நாங்கள் வேண்டுகிறோம். நீ அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது எல்லையற்ற கருணையைப் பொழிவாயாக! மேலும் அண்ணலாருடைய அந்தஸ்தை மென்மேலும்  உயர்த்துவாயாக!” இதுதான் அண்ணலார் மீது நாம் சலவாத்து சொல்ல வேண்டும் என்பதற்கான காரணச் சுருக்கமாகும்.


إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

                                                                                                      

நிச்சயமாக அல்லாஹ்வும்அவனுடைய வானவர்களும் நபி (முஹம்மது-ஸல் அவர்கள்) மீது சலவாத்து சொல்கிறார்கள். ஆகவே இறைநம்பிக்கையாளர்களே! நீங்களும் (முஹம்மது-ஸல்)  அவர்கள் மீது சலவாத்துச் சொல்லி சலாமும் கூறிக்கொண்டிருங்கள்.    திருக்குர்ஆன் :- 33:56

 

 அல்லாஹ்வும், அடியானும்

 

தொழுகைநோன்புஸகாத்ஹஜ் ஆகிய கடமைகள் குறித்து அல்லாஹுதஆலா கட்டளையிடும்போது அகில உலக இறைவனாகிய நானும்,  எனது வானவர்களும் இவைகளைச் செய்கிறோம் ஆகவே நீங்களும் செய்யுங்கள் என்று கூறவில்லை ஆனால் சலவாத்து பற்றி கூறும்போது மட்டும் அல்லாஹுதஆலா தன்னையும்,  தன் வானவர்களையும் சம்பந்தப்படுத்தி முதலில் கூறிவிட்டு அதன் பின்னரே அவனது அடியார்களான நம்மையும் அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பதன் நோக்கம் சலவாத்தின் கண்ணியத்தை நாம் முறையாக விளங்கி அதில் முழுமையாக ஈடுட வேண்டும் என்பதேயாகும்.

 

சலவாத்து என்ற நற்செயலில் மட்டும்தான் அல்லாஹுதஆலா மற்றும் வானவர்களுடன் மனிதனும் இணைந்து கொள்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு முஸ்லிம் மீது தொழுகை தினசரி ஐந்து முறையும்,  நோன்பு ஆண்டுக்கு ஒரு மாதமும்ஸகாத் ஆண்டுக்கு ஒரு முறையும்ஹஜ் ஆயுளில் ஒரு முறையும் கடமையாகும். இதன் வரிசையில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து ஓதுவது ஆயுளில் ஒருமுறை கட்டாயக் கடமையாகும் என்பது மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும்.

 

பல மடங்கு பலன்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا وَكَتَبَ لَهُ بِهَا عَشْرَ حَسَنَاتٍ ) யார் என்மீது ஒரு முறை சலவாத்து ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். மேலும், அதன் காரணமாக அவருக்குப் பத்து நற்பலன்களைப் பதிவு செய்கிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-687, திர்மிதீ-446, நசாயீ-1297

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً وَاحِدَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ ‏ ) எனது சமுதாயத்தில் எவரேனும் ஒருவர் (உளத்தூய்மையுடன்) என்மீது ஒருமுறை சலவாத்து ஓதினால் அதற்குப் பகரமாக அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள்புரிகிறான். மேலும் பத்து பாவங்களை அழித்து விடுகிறான். பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-1280, பைஹகீதப்ரானீ

 

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள்கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்முகத்தில் மகிழ்ச்சி ததும்ப (எங்களிடம்) வந்தார்கள். (அது குறித்து நாங்கள் வினவினோம்.) அப்போது அவர்கள் கூறியதாவது: என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لاَ يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ) "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள்மீது உங்கள் சமுதாயத்தில் உள்ள ஒருவர் சலவாத்து ஓதும்போதுஅவரின் மீது நான் பத்து முறை அருள்வேண்டி பிரார்த்தனை புரியாமலிருப்பதில்லை என்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?" என்று கூறினார்.   நூல்:- நசாயீ-1278

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் என்மீது ஒரு முறை சலவாத்து ஓதுகிறாரோ அவருக்கு அல்லாஹ் பத்து மடங்கு அருள் புரிகிறான். அவர் என் மீது பத்து முறை சலவாத்து ஓதினால் அல்லாஹ் அவர் மீது நூறு மடங்கு அருள் புரிகிறான். அவர் என்மீது நூறு முறை சலவாத்து ஓதினால் அவரின் நெற்றியில் நயவஞ்கத்திலிருந்தும்நரகத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர் என்ற வாசகத்தை எழுதிமறுமையில் உயிர்த் தியாகிகளுடன் அவரை அல்லாஹ் தங்க வைப்பான்.  நூல்:- தப்ரானீ

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் பலர்  அல்லாஹ் சலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள் புரிகிறான்" என்றும்,  வானவர்கள் சலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவங்களை மன்னிக்கும்படி வேண்டுகின்றனர்" என்றும்  பொருள் கொள்ள வேண்டும் என்று கூறினர்.   நூல்:- திர்மிதீ-447

 

சலவாத்து என்றால் ஈடேற்றம் என்று பொருளாகும். சலவாத்து சொல்பவர்களைப் பொறுத்து பொருள் மாறுபடும். இதன்படி அல்லாஹ் சலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள்புரிகிறான்" என்றும்,  வானவர்கள் சலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவமன்னிப்பு கோருகின்றனர்" என்றும்முஸ்லிம்கள் சலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பிரார்த்திக்கிறார்கள்" என்றும்  பொருள் கொள்ள வேண்டும்.

 

உலகப் பொருளீட்டில் ஒன்றுக்கு பத்து கிடைக்கின்றதெனில் அதற்காக உணவுஉறக்கத்தைக்கூட மறந்து, அதை பெற்றிட தீவிர முயற்சி செய்து முடிவில் அடைந்தும் விடுகிறோம். ஆனால் இம்மை, மறுமையாகிய  இரண்டையும் வெற்றிக்குரியதாக மாற்றித்தரும் இந்த சலவாத்தை நாம் ஓதும்போது உலகத்தில் நமது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுகிறது. மன அமைதி கிடைக்கிறது. மேலும்  மறுமையில் கணக்கற்ற நன்மைகளும்உயர் பதவிகளும்அல்லாஹ்வின் அருளும் கிடைக்கிறது எனும் போது அதைப் பேணாமல் விடமுடியுமாஇதனை புரிந்து கொண்டதால் தான் இறைநேசர்கள் அதிகமாக சலவாத்து  ஓதுவதில் இன்பம் கண்டனர்.

 

அண்ணலாரிடம் காண்பிக்கப்படுகிறது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلاَمَ ) "இப்பூமியில் சுற்றித் திரியும் அல்லாஹ்வுடைய வானவர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் என்னிடம் என்னுடைய சமுதாயத்தினர் கூறும் சலாமை அறிவிக்கின்றனர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்   நூல்:- நசாயீ-1265

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

إنَّ اللهَ تَعَالى وَكَّلَ بِقَبْرِي مَلَكًا أَعْطَاهُ أَسْمَاعَ الخَلائِق فَلَا يُصَلِّي عَلَيَّ أَحَدٌ إلَى يَومِ القيامَةِ إلَّا بَلَّغَنِي بِاسمِهِ وَاسْمِ أبِيهِ هَذَا فُلانُ بنُ فُلَانٍ قَدْ صَلَّى عَلَيْكَ ) நிச்சயமாக அல்லாஹுதஆலா என்னுடைய மண்ணறையில் ஒரு வானவரை நியமித்திருக்கிறான். அவரிடம் படைப்புகளின் பெயர்களையும் கொடுத்திருக்கிறான். ஆகவே இறுதி நாள்வரை யார் என்மீது சலவாத்து ஓதுகிறாரோ அவரின் பெயரையும் அவரின் தந்தையின் பெயரையும் குறிப்பிட்டு இன்னாரின் மகன் இன்னார் நாயகமே! உங்கள்மீது சலவாத்து ஓதினார் என்று அந்த வானவர் என்னிடம் சொல்லுவார்.         அறிவிப்பாளர்:- அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள்     நூல்:- பஸ்ஸார்முக்தசர் அத்தர்ஙீப் வத்தர்ஹீப்-573

 

அஸ்வத் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது. (நபித்தோழர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மக்களிடம்), ( إِذَا صَلَّيْتُمْ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَأَحْسِنُوا الصَّلاَةَ عَلَيْهِ فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ لَعَلَّ ذَلِكَ يُعْرَضُ عَلَيْهِ ) "நீங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீது சலவாத் ஓதி பிரார்த்தித்தால் அதை அழகுறச் சொல்லுங்கள். ஏனெனில்நீங்கள் கூறும் சலவாத்து நபியவர்களுக்கு எடுத்துக்காட்டப்படலாம். அதை நீங்கள் அறிய மாட்டீர்கள்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-896

 

நாயகமே! இந்த தேசத்திலுள்ள இன்னாரின் மகன் இன்னார்இந்த நேரத்தில்,  இத்தனை தடவை உங்கள் மீது சலவாத்து ஓதினார் என்று அண்ணலாரிடம் வானவர் நமது பெயரை சொல்லும்போது நம்மைப் பற்றி அண்ணலாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுவே நமக்கு கிடைக்கப் பெற்ற நற்பாக்கியமாகும்.

 

நாம் அண்ணலாரை உலகத்தில் நேரடியாக சந்திக்க முடியாமல் போய்விட்டாலும் நாம் அண்ணலார்மீது சலவாத்து ஓதும்போது நமது பெயரை அண்ணலார் அறிந்து கொள்வதினால் அண்ணலாரை நேரடியாக சந்தித்தது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

 

அதிகமாக ஓத வேண்டும்

 

நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

أَكثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِي كُلِّ يَومِ جُمُعَةٍ فَمَن كَانَ أَكثَرَهُم عَلَيَّ صَلَاةً كَانَ أَقرَبَهُم مِنِّي مَنزِلَةً ) ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் என்மீது அதிகமாக சலவாத்து ஓதுங்கள். ஏனென்றால் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் என் சமுதாயத்தினர் ஓதிய சலவாத்து என்னிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. யார் என் அதிகமாக சலவாத்து ஓதியுள்ளாரோ அவர் (மறுமை நாளன்று) தகுதியைக் கவனித்து என்னுடன் மிக நெருக்கமாக இருப்பார்.   அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள்  நூல்:- பைஹகீமுக்தசர் அத்தர்ஙீப் வத்தர்ஹீப் -575, ஹயாத்துல் அன்பியா

 

இந்த நபிமொழிக்கு விரிவுரையாளர்களில் சிலர் ஐநூறு முறை சலவாத்து ஓதுவது அதிகம் என்ற கணக்கில் அடங்கும் என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.

 

இமாம் ஜஅஃபர் ஸாதிக் (ரஹ்) அவர்களிடம், ( أَفْضَلِ اَلْأَعْمَالِ  يَوْمَ اَلْجُمُعَةِ ) வெள்ளிக்கிழமையில் மிகவும் சிறந்த நற்செயல் என்ன? என்று கேட்கப்பட்டது.  அதற்கு இமாமவர்கள், ( اَلصَّلاَةُ عَلَى  مُحَمَّدٍ وَ  آلِ مُحَمَّدٍ مِائَةَ مَرَّةٍ بَعْدَ اَلْعَصْرِ وَ مَا زِدْتَ فَهُوَ أَفْضَلُ ) “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும்அவரது குடும்பத்தார் மீதும் அஸர் தொழுகையின் பின்னர் நூறுமுறை சலவாத்துச் சொல்வது மிகவும் சிறந்ததாகும். நீர் அதன் எண்ணிக்கையினை அதிகரித்தால் அது இன்னும் மிகச் சிறப்பானதாகும்” என்று கூறினார்கள். நூல்:-  ஜாமிஉல் அக்பார் பாகம்-பக்கம்-63

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَىَّ صَلاَةً ) மறுமை நாளில் மனிதர்களிலேயே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என் மீது அதிகமாக சலவாத்து ஓதியவர்கள் ஆவர்.    அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-446, இப்னுஹிப்பான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது அதிகமாக சலவாத்து ஓதுவது அண்ணலாரின் மீது கொண்ட அன்புக்கும், மரியாதைக்கும் அடையாளமாகும். அந்த அன்பு உண்மையாக இருக்கும்போது அண்ணலாரை முழுமையாக பின்பற்றும் நிலை உருவாகும். இதுவே அண்ணலாரின் நெருக்கத்தை அதிமாக்கும்.

 

பிரார்த்தனையின் போது...

 

ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமலும் (புகழாமலும்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து  ஓதாமலும் பிரார்த்திப்பதை அண்ணலார் செவியுற்றார்கள். அப்போது அண்ணலார் ( عَجِلَ هَذَا ) "இவர் அவசரப்பட்டுவிட்டார்" என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார் அவரை அழைத்து ( إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ ) "உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் அவர் தன் இறைவனை கண்ணியப்படுத்தும் விதத்தில் புகழட்டும். பின்னர் அருமை நாயகம் (ஸல்) மீது சலவாத்து ஓதட்டும். பின்னர் தான் நாடியதை பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-1481, திர்மிதீ-3389, இப்னு குஸைமாஇப்னு ஹிப்பான்

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (எனக்கு அருகில்) இருக்கநான் (தொழுகையை முடித்து) அமர்ந்ததும் முதலில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தேன். பிறகு அண்ணலாருக்காக அருள்வேண்டி (சலவாத் கூறி)னேன். பிறகு எனக்காகப் பிரார்த்தித்தேன். அப்போது அண்ணலார் ( سَلْ تُعْطَهْ ) "கேளுங்கள்கொடுக்கப்படும்" என்று இருமுறை கூறினார்கள்.  நூல்:- திர்மிதீ-541

 

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. உமர் (ரலி) அவர்கள் ( إِنَّ الدُّعَاءَ مَوْقُوفٌ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ لاَ يَصْعَدُ مِنْهُ شَيْءٌ حَتَّى تُصَلِّيَ عَلَى نَبِيِّكَ صلى الله عليه وسلم ‏ ) "நீ உன் நபியின் மீது சலவாத்து  ஓதாத வரை உனது பிரார்த்தனை வானத்துக்கும்பூமிக்குமிடையே தடைபட்டு நிற்கும் அதில் எதுவும் உயராது" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-448, நசாயீமுஸ்னது அஹ்மத்தாரமீதாரகுத்னீ

 

பிரார்த்தனையை ஆரம்பிக்கும்போதும்அதன் கடைசியிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மீது சலவாத்து  ஓதுதல் அவசியமாகும். இவ்விதமாக பேணும்போது அப்பிரார்த்தனை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அதிவிரைவில் சென்றடைகின்றன.

 

அரசு முத்திரை இல்லாத பதிவுப் பத்திரத்திற்கு மதிப்பில்லை. அது வெறும் காகிதம் தான். அதுபோல தான் அல்லாஹ்வைப் புகழப்படாத அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத்து ஓதப்படாத பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் மதிப்பில்லை.

 

பொது சபையில்...

 

நபிகள் பெருமானார் (ஸல்) கூறினார்கள்.

مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ إِلاَّ كَانَ عَلَيْهِمْ تِرَةً فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ ) அல்லாஹ்வை தியானம் செய்யாமலும்தங்கள் நபியின் மீது சலவாத்து ஓதாமலும் இருக்கும் சபையில்  அமருபவர்கள் மறுமைநாளில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிடுவர். அல்லாஹ் நாடினால் அவர்களை வேதனை செய்வான் அல்லது மன்னிப்பான்.    அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்     நூல்:- அபூதாவூத்திர்மிதீ-3380

 

நன்மைகளின் பொக்கிஷமாகவும், ஈடேற்றத்திற்கும்உயர் பதவிக்கும் காரணமாக சலவாத்து இருப்பதால் தான் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து  ஓதுவது ஃபர்ளு எனும் கட்டாயக் கடமையாகும். ஒரு சபையில் அண்ணலாரின் பெயரைக் கூறும் போதும்கேட்கும் போதும் ஒருமுறை சலவாத்து ஓதுதல் வாஜிப் ஆகும். திரும்பத் திரும்பக் கேட்கும் போது சலவாத்து ஓதுதல் சுன்னத் ஆகும் என்றும், முஸ்தஹப் ஆகும் என்றும் மார்க்க அறிஞர்கள்  சட்டமியற்றியுள்ளனர்.

 

நன்றியின் வெளிப்பாடு

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَنْ نَسِيَ الصَّلاَةَ عَلَىَّ خَطِئَ طَرِيقَ الْجَنَّةِ ) என்மீது சலவாத்து ஓத மறந்தவர் சொர்க்கத்தைத் தவறவிட்டவர் ஆவார்.   நூல்:- இப்னுமாஜா-898தப்ரானீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

اَلبَخِيلُ الَّذِي مَن ذُكِرتُ عِندَهُ فَلَم يُصَلِّ عَلَيَّ ) எவரிடம் என்னைப் பற்றி சொல்லப்பட்டு அவர் என் மீது சலவாத்து  ஓதவில்லையானால் அவர் கஞ்சன் ஆவார் அறிவிப்பாளர்:- அலி (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3459நசாயீமுஸ்னது அஹ்மது,  முக்தசர் அத்தர்ஙீப் வத்தர்ஹீப்- 577

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்தின் உயர்வுக்காகவும்நன்மைக்காகவும் ஊண், உறக்கம் பாராமல் பாடுபட்டு பேருபகாரம் செய்திருப்பதால் அண்ணலாரின் பெயரைக் கேட்கும்போது அண்ணலாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் மீது சலவாத்து  ஓதவதே முறையாகும். பெரிய உபகாரம் செய்தவருக்கு வார்த்தையில்கூட நன்றி செலுத்தவில்லையெனில் அவனைவிட பெரிய  கஞ்சன் யாராக இருக்க முடியும்?

 

பாங்கு சொல்லப்பட்ட பின்பும்தொழுகையின் கடைசி இருப்பிலும், (ஜனாஸா) பிரேதத் தொழுகையிலும்பள்ளிவாசலுக்குள் நுழையும் போதும் -  வெளியேறும் போதும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து  ஓதுதல்  வலியுத்தப்பட்ட சுன்னத் ஆகும்.

 

கவலையைப் போக்க....

 

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறிதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாயகமே! நான் தங்கள்மீது அதிகமாக சலவாத்து ஓதி (இறைவனிடம்) பிரார்த்திக்க விரும்புகிறேன். நான் எனக்காக செய்யும் பிரார்த்தனையில் எந்த அளவு தங்களுக்காக (சலவாத்து  ஓத) ஒதுக்கட்டுமா?” என்று வினவினேன். அண்ணலார், ( مَا شِئْتَ ‏ ) "நீ விரும்பிய அளவு ஓது!" என்றார்கள்.

 

நான் (எனக்காக செய்யும் பிரார்த்தனையில்) நான்கில் ஒரு பாகம் (ஒதுக்கட்டுமா)?” என்று வினவினேன். அண்ணலார், ( مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ ) "நீ விரும்பிய அளவு ஓது! ஆனால், இன்னும் அதிகப்படுத்தினால் அது உமக்கு நல்லது" என்றார்கள். நான் (எனக்காக செய்யும் பிரார்த்தனையில்) பாதியளவு (ஒதுக்கட்டுமா)?” என்று வினவினேன். அண்ணலார், "நீ விரும்பிய அளவு ஓது! ஆனால், இன்னும் அதிகப்படுத்தினால் அது உமக்கு நல்லது" என்றார்கள். நான் நான் (எனக்காக செய்யும் பிரார்த்தனையில்) மூன்றில் இரு பாகம் (ஒதுக்கட்டுமா)?” என்று வினவினேன். அண்ணலார், "நீ விரும்பிய அளவு ஓது!  ஆனால், இன்னும் அதிகப்படுத்தினால் அது உமக்கு நல்லது" என்றார்கள்.

 

நான் எனக்காக பிரார்த்திக்கும் நேரம் முழுவதையும் தங்களுக்காக ஒதுக்கட்டுமா?” என்று வினவினேன். அண்ணலார், ( إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ ) "அப்படி நீ செய்தால் உன் கவலையைப் போக்க அதுவே போதுமானதாகும். மேலும், அதன் மூலம் உனது பாவமும் மன்னிக்கப்படும்" என்று கூறினார்கள்.   நூல்:- திர்மிதீ- 2381, முஸ்னது அஹ்மத்

 

உலகின் தேவைகளில் மகத்தானதுகவலையிலிருந்து பாதுகாப்புமறுமையின் தேவைகளில் மகத்தானதுபாவங்கள் மன்னிக்கப்படுவது. இவ்விரண்டும் ஸலவாத் சொல்வதால் நிறைவேறுகிறது.

 

சலவாத்து என்பது சிறிய வணக்கமாக இருந்தாலும் அது இறை தியானம்பிரார்த்தனை போன்ற பல வணக்கங்களை உள்ளடக்கியுள்ளதால் இறை தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு சொல்லப்பட்ட அனைத்து சிறப்புகளும் அதில் அடங்கிவிடும்.

 

சலவாத்தில் அல்லாஹ்வின் திருநாமம் வருவதால் இறை தியானத்தின் நன்மையும்அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிரார்த்தனையாக அது இருப்பதால் பிரார்த்தனை செய்த நன்மையும் அதில் உண்டு. அதனால் தான் சலவாத்து ஓதுவதில் அதிக நேரத்தை செலவளிக்குமாறு தனது தோழருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்பாகக் கூறினார்கள்.

 

நூல்கள் எழுதும் போதும், படிக்கும் போதும்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் தமது எழுத்துகளில் சலவாத்தின் வாசகத்தை எழுதுவாரோஎதுவரை அதில் என் பெயர் எழுதப்பட்டிருக்குமோ அதுவரை அவருக்காக வானவர்கள் பாவமன்னிப்பு கோருகின்றார்கள்.   நூல்:- தப்ரானீ

 

அபா இஸ்மத் (ரஹ்) அவர்கள் தலை சிறந்த இலக்கிய எழுத்தாளர். அவர்  மரணித்த பின்னர் மார்க்க மேதை ஹசன் பசரீ (ரஹ்) அவர்கள் அவரைக் கனவில் கண்டு உன்னை அல்லாஹ் என்ன செய்தான் என்று வினவினார்கள். அதற்கு அவர் "அல்லாஹுதஆலா என்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து விட்டான்." என்று பதிலளித்தார். எதன் காரணமாக என்று அவரிடம் மீண்டும் வினவினார்கள்.

 

அதற்கு அவர் "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருநாமத்தை நினைவு கூர்ந்து எழுதும் போதெல்லாம் அண்ணலார் மீது சலவாத்து ஓத தவறியதே இல்லை அந்த சலவாத்தின் கண்ணியத்தால் தான்" என்று கூறினார்.  நூல்:- ஜுப்ததுல் வாயிளீன்

 

நூல்களில் (ஸல்) என்றும், (ஸல் அம்) என்றும் சலவாத்தை சுருக்கி எழுதியிருப்பதைப் படிக்கும்போது அதை முழுமையாக சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  என்று தான் படிக்க வேண்டும்.

 

கனவில் காணலாம்

 

ஃபுளைல் பின் இயாள் (ரஹ்)சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஆகிய இரு சட்ட மேதைகள் கூறியதாவது. நாங்கள் இருவரும் ஹஜ் கிரியைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கண்டோம். அவர் கஅபாவைச் சுற்றி வரும்போதும்சஃபா -மர்வாவுக்கு மத்தியில் ஓடும் போதும்அரஃபா மற்றும் மினாவில் தங்கும்போதும் என அனைத்து நிலைகளிலும் சலவாத்தை மட்டுமே ஓதிக் கொண்டிருந்தார்.

 

இதனைப் பார்த்த நாங்கள் அவரிடம் சகோதரரே! ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் ஆனால் நீர் எல்லா இடங்களிலும் சலவாத்தை மட்டுமே திரும்பத் திரும்ப ஓதுகிறீரே! என்று கூறினோம். அதற்கு அவர் எனக்கும் ஹஜ்ஜுடைய சட்டங்கள் தெரியும்.  ஆனால் நான் சலவாத்தை மட்டும் திரும்பத் திரும்ப ஓதுவதற்கு காரணம் உண்டு.

 

"அதாவது இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு நானும், எனது தந்தையும் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் என் தந்தை இறந்து விட்டார். பிறகு என் தந்தையின் முகம் கழுதையின் முகம் போன்று கோரமாக மாறிவிட்டது. இதனைப் பார்த்து நான் மன வேதனை அடைந்து அவரது முகத்தை மூடிவிட்டு சஞ்சலத்துடன் அமர்ந்திருந்தேன். அப்போது என்னையும் அறியாமல் உறங்கி விட்டேன். அந்த உறக்கத்தில் எனக்கு  கனவு ஏற்பட்டது. அந்த கனவில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றி என் தந்தையின் முகத்தில் அண்ணலார் தனது திருக்கரத்தால் தடவி விட்டார்கள். பிறகு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. எனது தந்தையின் முகம் பிரகாசமாக ஜொலித்தது.

 

நான் அண்ணலாரிடம் இதற்கான காரணத்தை வினவினேன். அதற்கு அண்ணலார் "உனது தந்தைக்கு வட்டியின் வரவு-செலவு தொடர்பு இருந்தது அதனால் அவ்விதம் தண்டிக்கப்பட்டார். ஆனால் அவர் தினந்தோறும் உறக்கத்திற்கு முன் நூறு முறை என் மீது சலவாத்து  ஓதும் பழக்கமுடையவர். அதனால் தான்  என் திருக்கரத்தால் அவரது முகத்தில் தடவும் நற்பாக்கியம் அவருக்கு கிடைத்தது" என்று கூறினார்கள். ஆகவே என் தந்தையின் விமோச்சனத்திற்கு காரணமாகவும் நான் கனவில் அண்ணலாரை காண்பதற்கு காரணமாகவும் இருந்த அந்த சலவாத்தையே என் வாழ்நாள் முழுவதும் ஓத வேண்டும் என்பதை அவசியமாக்கிக் கொண்டேன்" என்று கூறினார்.   நூல் :- மசாபீஹ்

 

தனது வாழ்நாள் முழுவதும் வட்டிப் போன்ற பெரும் பாவங்கள் செய்து கொண்டு சலவாத்து  மட்டும் ஓதிவிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்பது இதன் பொருளல்ல. சிலவேளை அல்லாஹுஆலா சலவாத்தின் கண்ணியத்தின் மூலம் பெரும் பாவங்களையும் மன்னிக்கக் கூடும் என்று விளங்குகிறது.

 

நாம் வாழ்நாளில் அதிகமாக சலவாத்து ஓதுவதை வழமையாக்கிக் கொண்டால் கனவின் மூலம் அருமை நாயகம்  (ஸல்) அவர்களை காணும் பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

 

உடலுக்கு உயிர் உன்னதம் செய்வதைப் போன்று உள்ளத்தில் உறைந்து போயுள்ள இறை நம்பிக்கைக்கு உயிரோட்டமாக திகழ்வது இறை தியானமும்சலவாத்தும் தான் என்பது இறை நேசர்களின் கருத்தாகும்.

 

பல வகைகள்

 

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் நாயகமே! தங்களுக்கு சலாம் சொல்லுவதை அறிந்துள்ளோம். ஆனால் தங்கள் மீதும்,  தங்கள் குடும்பத்தார் மீதும் நாங்கள் சலவாத்து ஓதுதல் எப்படி என்று (கற்றுத் தருமாறு) வினவினோம். அதற்கு அண்ணலார் (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தரூத் இப்ராஹீமை (ஓதுவதே சலவாத்து  ஆகும் என்று) கற்றுத்தந்தார்கள். நூல்:- புகாரீ-3370, அபூதாவூத்-830, நசாயீ-1288

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَنْ سَرَّهُ أَنْ يَكْتَالَ بِالْمِكْيَالِ الأَوْفَى إِذَا صَلَّى عَلَيْنَا أَهْلَ الْبَيْتِ فَلْيَقُلِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ وَأَزْوَاجِهِ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ  

யார் நிறைவான நன்மை கொடுக்கப்படுவதை விரும்புகிறாரோ அவர் என் மீதும்என் குடும்பத்தினர் மீதும் இவ்வாறு சலவாத்து ஓதட்டும். "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதினின் நபிய்யீ வஅஸ்வாஜிஹி உம்மஹாத்தில் முஃமினீன வதுர்ரியத்திஹி வஅஹ்லி பைத்திஹி கமா சல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்"      அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்    நூல்:- அபூதாவூத்- 982

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  யார் வெள்ளிக்கிழமை  அசருடைய ஃபர்ளு தொழுகைக்குப் பின் தொழும் இடத்தை விட்டும் எழுந்திருக்கும் முன்பு இந்த சலவாத்தை ஓதுவாரோ அவருடைய 80 வருட பாவங்கள் மன்னிக்கப்பட்டு 80 வருட வணக்கத்தின் நன்மைகள் அவருடைய கணக்கில் எழுதப்படும். "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வஅலா ஆலிஹி வசல்லிம் தஸ்லீமன்"        அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல் :- பைஹகீ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اللهمَّ صَلِّ عَلَى محمدٍ، وَّأَنزِلْهُ الْمَقعَدَ الْمُقَرَّبَ عِندَكَ يَومَ القِيَامَةِ؛ وجَبَتْ لَهُ شَفَاعَتِي ) "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதிவ் வஅன்ஸில்ஹுல் மக்அதல் முக்கர்ரப இன்தக்க யவ்மல் கியாமதி" என்ற இந்த சலவாத்தை யார் ஓதி வருகிறாரோ அவருக்கு என்னுடைய சிபாரிசு  அவசியமாகி விட்டது. அறிவிப்பாளர்:- ருவைஃபிஃ பின் சாபித் (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார்தப்ரானீமுக்தசர் அத்தர்ஙீப் வத்தர்ஹீப்-576

 

இன்னும் இது போன்ற பல வகையான சலவாத்துக்கள் உண்டு. உளூ இன்றி சலவாத்து ஓதுதல் ஆகும் என்ற போதிலும் உளூவுடன் ஓதுதலில் அதிக சிறப்புள்ளது.

 

சலவாத்து  ஓதுவதுப் பற்றி நபிமொழிகளே வராவிட்டாலும்கூட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் பாக்கியங்களுக்காக நாம் காலமெல்லாம் சலவாத்து  ஓதுவதிலேயே மூழ்கியிருந்தாலும் அது சொற்பமேயாகும். அதற்கு மேல் விஷேசம் என்னவென்றால் நாம் நமது கடமையை நிறைவேற்ற சலவாத்து  ஓதுகிறோம். அதற்கு அல்லாஹ்வோ ஆயிரக்கணக்கான நன்மைகளை நமக்கு கூலியாக தருகிறான். எனவே நாம்  சலவாத்தின் மகிமையை விளங்கி என்றென்றும் அதனை மனத்தூய்மையுடன் ஓதி வர அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை. செல்: 9840535951


 

1 comment:

  1. அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்.

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...