Search This Blog

Thursday, 6 May 2021

ஏற்றம் தரும் ஏழை வரி

 

ஏற்றம் தரும் ஏழை வரி


وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ


அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஸக்காத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும்.) அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். திருக்குர்ஆன்:- 30:39


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் காத் என்பதும் ஒன்றாகும். இந்த ஜகாத் பொருளாதாரம் சீராக அமைந்துஅது வளமிக்கதாக ஆகவும், பொருட்கள் ஓரிடத்திலேயே குவியாமல் இருக்கவும்வறுமை நீக்குவதற்கு இறைவனால் வழி வகுக்கப்பட்ட மிக அருமையான திட்டமாகும்.


இன்றைய அரசுகள் மக்களின் வருமானத்திற்கு வரி விதிக்கின்றன. ஆனால், இஸ்லாம் சற்று வித்தியாசமாக சேமிப்புக்குரியவற்றுத்தான் (ஸகாத் எனும்) வரி விதிக்கின்றது. 


தனக்கு அல்லாஹ்வின் மீது பிரியமுண்டு என்று சொல்லாத இறைவிசுவாசி ஒருவரும் இருக்கமாட்டார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு இறை விசுவாசியும் தனக்கு எல்லா பொருட்களின் மீதுள்ள பிரியத்தை விட அல்லாஹ்வின் மீதுள்ள பிரியம் அதிகம் என்று கூறுகிறான். அவன் கூறிய வார்த்தை உண்மை தானா...என்பதை கண்டறிவதற்கு ஒரு அத்தாட்சி தேவைப்படுகிறது. அதனால் இம்மனிதனை சோதிக்க நாடி செல்வத்தைக் கொடுத்து எல்லா பொருட்களின் மீதுள்ள பிரியத்தைவிட உனக்கு அல்லாஹ்வின் மீது அதிக பிரியமிருப்பது உண்மையானால் நீ நேசிக்கின்ற பொருட்களை அல்லாஹ்வுக்காக கொடு. அவ்வாறு கொடுத்தால் தான் அல்லாஹ்வின் மீது அதிக பிரியமுள்ளவன் என்று இஸ்லாம் இயம்புகிறது.


ஸகாத் நம் மீது கடமையாக ஆக்கப்பட்டிருப்பதுநம்முடைய செல்வம் அழிக்கப்படாமலும்மென்மேலும் அதிகப்படுத்துவதற்கு தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை. இதனைத் தான் தலைப்பில் கண்ட திருவசனம் தெளிவுபடுத்துகிறது. காத் என்ற சொல்லிற்கு சுத்தமாக்குதல், அதிகமாக்குதல்வளர்த்தல் என்ற பொருள்கள் அகராதியில் காணப்படுகிறது.


செல்வம் காக்கப்படுகிறது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَتَصَدَّقُ أَحَدٌ بِتَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ إِلاَّ أَخَذَهَا اللَّهُ بِيَمِينِهِ فَيُرَبِّيهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ قَلُوصَهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ أَوْ أَعْظَمَ ) "யார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரிச்சம் பழத்தை தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது கரத்தால் வாங்கி உங்களில் ஒருவர்தமது குதிரைக் குட்டியை அல்லது ஒட்டகக் குட்டியை வளர்ப்பது போன்று வளர்ச்சியடையச் செய்கிறான். இறுதியில் அது மலையைப் போன்று அல்லது அதைவிட மிகப் பெரியதாக மாறிவிடுகிறது. அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-முஸ்லிம்-1843


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஒரு மனிதர் தன் பொருளுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றினால் அதன் பலன் என்ன? என்று வினவினார். நபியவர்கள், ( مَنْ أدَّى زَكَاةَ مَالِهِ، فَقَدْ ذَهَبَ عَنْهُ شَرُّهُ"அவர் தன் பொருளுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றுகின்றபோது அவரை விட்டும் அவருடைய கெடுதி நீங்கிவிடும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- தப்ரானீ, இப்னு குஸைமா, ஹாக்கிம், முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-212


ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "காத் கொடுக்கப்பட்ட பொருள்"  இறைவனால் பாதுகாக்கப்படும் என்ற விசயத்தைப் பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதுஒரு கிருஸ்தவர் கவனத்தோடு கேட்டு இவ்விசயம் உண்மையானதாக இருந்தால் நாம் இஸ்லாத்தை தழுவவேண்டும். இல்லையேல் இந்த மனிதரையும்இவரின் தோழரையும் ஏளனம் செய்து வெறுக்க வேண்டும் என்று எண்ணி தன்னுடைய செல்வம் அனைத்திற்கும் கணக்குப்படி கொஞ்சமும் குறைவில்லாமல் ஸகாத் கொடுத்தார்.


இந்நிகழ்விற்கு முன் அவருடைய பங்காளி மிஸ்ரு தேசத்திற்கு சரக்குகள் கொண்டு விற்பனைக்காக போயிருந்தார். அங்கு போன வியாபாரிகளில் ஒருவர் தம் முதலாளிக்கு எழுதிய கடிதத்தில் "ஒரு கொள்ளை கூட்டத்தினர் வந்து வழி மறித்து தங்களிடமிருந்த பொருட்களை அப்படியே கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர்என்று குறிப்பிட் டிருந்தார்.


இந்தச் செய்தி அந்த கிருஸ்துவர் கேள்விப்பட்டு "நம்முடைய பங்காளியும் அவரின் பொருட்களும் என்ன கதி ஆனதோ தெரியவில்லையேஎன்று துக்கித்து கதறிக் கொண்டிருக்கும்போதுஅவரது பங்காளியிடமிருந்து வந்த கடிதத்தில் திருடர்கள் மற்ற வியாபாரிகளின் பொருட்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு போய் விட்டனர் என்பதாகவும்நான் வியாபாரக் கூட்டத்திற்கு பிந்தி வந்ததால் நம்முடைய பொருட்களெல்லாம் கொள்ளை போகாமல் பத்திரமாக உள்ளது என்றும் எழுதிய வாசகத்தைப் பார்த்ததும்உள்ளம் குளிர்ந்துஅந்த முஹம்மது நபியின் வாக்கியமும்அவரின் மார்க்கமும் உண்மை என்று வியந்து கொண்டே தம் குடும்பத்தினருடன் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துதமக்கு நேர்ந்த விசயத்தைக் கூறிபுனித மார்க்கமான இஸ்லாத்தில் இணைந்தார். நூல்:- இப்னு அபீதுன்யா, ரவ்ளத்துல் உலமா


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا خَالَطَتِ الزَّكَاةُ مَالًا قَطُّ إِلَّا أَهْلَكَتْهُ"காத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தை பிரித்து எடுக்காவிடில்அது அசல் பொருளையே அழித்து விடும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள்    நூல்:-  தாரீக்குல் கபீர் இமாம் புகாரீ, மிஷ்காத்


"அழிந்துவிடும்எனும் வாசகத்துக்கு ஒருவன் தனது பொருளுக்கு உரிய காத்தை வழங்காமல்தான் அதனை அனுபவித்துக் கொண்டிருந்தானாகில் கண்டிப்பாய் அவனுடைய முழு உடமையும் அழிந்து போகும் என்பதல்ல பொருள். மாறாக எதிலிருந்த பயனடைய அவனுக்கு உரிமையில்லையோஎது ஏழைக்கு உரிய பங்கோ அதனை உண்டுஅவன் தன்னுடைய மார்க்கத்தையும்இறை நம்பிக்கையையும் அழித்துக் கொண்டான் என்பதே பொருளாகும். என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் சில சமயம் ஸகாத் கொடுக்காமல் உண்டு வாழ்பவனின் சொத்து முழுவதும் கணப் பொழுதில் அழிந்து போகின்றது என்பதையும் பார்க்கின்றோம்.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எப்பொருள்களுக்கு காத் வழங்கப்படவில்லையோஅப்பொருள்கள் 1.அரசாங்கம் 2.நெருப்பு 3.தண்ணீர் 4.திருடன்5.நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றின் மூலமாக அழிக்கப்படும்.


அருள்வளம் நிறைந்த பிரார்த்தனை


அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. (பரம ஏழையாக வாழ்ந்த) ஸஅலபா பின் ஹாத்திப் அல்அன்சாரீ என்பவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நாயகமே! அல்லாஹ் எனக்கு செல்வத்தை வழங்க வேண்டுமென அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.


உடனே அண்ணலார், "நீர் இப்படியே இருப்பது தான் உனக்கு நல்லதுஎன்று கூறியும் கேளாமல் பிரார்த்திக்க வற்புறுத்தினார். பிறகு அவர், ( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَئِنْ دَعَوْتَ اللَّهَ فَرَزَقَنِي مَالًا لَأُعْطِيَنَّ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ  ) “உங்களை உண்மையுடன் அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்து, அதையடுத்து அல்லாஹ் எனக்குச் செல்வம் வழங்கினால் நான் ஒவ்வொருவருக்கும் அவரவரின் உரிமைகளை நிச்சயம் வழங்கி விடுவேன்” என்றார். பின்பு அண்ணலார் அவருக்காக பிரார்த்தித்தார்கள்.


அண்ணலாரின் பிரார்த்தனையின் அருள்வளத்தால் அவர் முதன்முதலாக ஒரு ஆட்டை விலைக்கு வாங்கினார். அதன் மூலம் ஆடுகள் பெருகி மந்தைகளாக மாறி மிகப்பெரும் செல்வந்தராக மாறிவிட்டார். ஆடுகள் பல்கிப் பெருகியதால், அவருக்கு மதீனா நகர் நெருக்கடியாக தோன்றியது.  ஆகவே, அங்கிருந்து நகர்ந்து மதீனாவின் புறநகரில் உள்ள பள்ளத்தாக்குகளில் ஒன்றில் வசித்தார். ஆரம்பத்தில் சில தொழுகைகள் தவறியது. பிறகு ஜும்ஆ தொழுகையும் தவறியது. அண்ணலார், (  مَا فَعَلَ ثَعْلَبَةُ )ஸஅலபாவுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் அவரின் நிலையை விவரித்தனர். அப்போது அண்ணலார், (  يَا وَيْحَ ثَعْلَبَةَ  )ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! என்று மூன்று முறை அதையே கூறினார்கள்.


அதன்பிறகு, "(நபியே!) அவர்களின் செல்வங்களில் இருந்து தர்மத்தைப் பெற்று அவர்களைத் தூய்மைப்படுத்துவீராக" (9:103) எனும் வசனம் அருளப்பெற்றது. ஸகாத் தொடர்பான சட்ட திட்டங்களும் நபியவர்களுக்கு அருளப்பெற்றது.


எனவே, முஸ்லிம்கள் வழங்கியாக வேண்டிய கட்டாய காத்தை திரட்டுவதற்கான இரண்டு பேரை அனுப்பி வைத்தார்கள். அவ்விருவரும் புறப்பட்டு ஸஅலபாவிடம் வந்து, ஸகாத் வழங்குமாறு அவரிடம் கோரினர். அதற்கு அவர், “இது வரியைப்போல் இருக்கிறது” என்று கூறி, நீங்கள் இப்போது போய்விட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு பிறகு வாருங்கள் பார்க்கலாம்” என்றார்.


எனவே, அவ்விருவரும் சென்றுவிட்டனர். பின்னர் மற்ற மக்களிடம் சென்று அவர்கள் வழங்கிய காத்களை எல்லாம் வசூல் செய்துவிட்டு, பின்னர் மறுபடியும் ஸஅலபாவிடம் சென்றனர். இப்போது அவர், தற்சமயம்  நீங்கள் சென்று வாருங்கள், நான் யோசித்து விட்டு பின்னர் சொல்லுகிறேன் என்றார். அவ்விருவரும் புறப்பட்டு வந்து இதைப்பற்றி அண்ணலாரிடம் கூறுவதற்கு முன் ஸஅலபாவுக்கு ஏற்பட்ட கேடே! என்று அண்ணலார் கூறினார்கள்.


அப்போதுதான் அல்லாஹ், ஸஅலபாவின் செயலைக் கண்டித்து  சில வசனங்களை  (9:75, 76, 77) அருளினான். இதை அறிந்த பின்னர் (மனமின்றி) ஸஅலபா கொடுக்க முன்வந்த காத்தை அண்ணலார் ஏற்க மறுத்து, ( إِنَّ اللَّهَ مَنَعَنِي أَنْ أَقْبَلَ مِنْكَ صَدَقَتَكَ ) "உம்முடைய காத்தை உம்மிடமிருந்து ஏற்க வேண்டாமென அல்லாஹ் என்னைத் தடுத்துவிட்டான்" என்று கூறிவிட்டார்கள். பிறகு அண்ணலாரின் மறைவுக்கு பின்பு, ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஸஅலபா காத் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்த போதுஅண்ணலாரே வாங்கவில்லை. எனவே, நானும் வாங்க மாட்டேன் என்று கூறினார்கள். இப்படியே ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தங்களின் ஆட்சி காலத்தில் ஸஅலபா கொண்டு வந்த பொருட்களை வாங்க மறுத்து விட்டார்கள்.  நூல்:-  தப்சீர் தபரீ, குர்துபீ, இப்னுகஸீர், துர்ருல் மன்சூர்


ஸஅலபாவிடம் கேட்கப்பட்ட நேரத்தில் ஜகாத் கொடுக்க மறுத்ததால் இறுதி வரை அவரிடமிருந்து ஸகாத் ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. இஸ்லாமிய கடமைகளில் எந்த ஒன்றையும் அதற்குண்டான நேரத்தில் நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்துவது பெரும் குற்றமே ஆகும்.


செய்வதை திருந்தச் செய்


ஸகாத் பொருட்களை நம் விருப்பபடி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியாது. திருமறையின் மூலமாக அல்லாஹ் எவருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென கூறியுள்ளானோஅவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.


திருமறை கூறும் ஸகாத் வாங்கும் தகுதியுடைய எட்டு பிரிவினர்கள். 1. ஏழைகள், 2. தரித்திர நிலையில் உள்ள ஏழைகள், 3. ஸகாத் பொருட்களை வசூலிப்பவர்கள், 4. புதிதாக இஸ்லாத்தை தழுவியோர், 5. உரிய தொகை இல்லாததால் விடுதலை பெறாமல் இருக்கும் அடிமைகள், 6. கடனில் மூழ்கி கிடப்பவர்கள், 7. அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்பணித்தவர்கள், 8. வழிப்போக்கர்கள். திருக்குர் ஆன்:- 9:60


இதற்கு மாற்றமாக செயல்பட்டால் காத் என்ற கடமையை நிறைவேற்றியவர்களாக ஆக முடியாது. ஆனால் சிலர் அறியாதவர்களாக பள்ளிவாசல் கட்டுவதற்கும்மதரஸா கட்டுவதற்கும்அனாதை இல்லம் கட்டுவதற்கும்இவைகளை மராமத்து பணிகள் செய்வதற்கும்நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கும் ஸகாத்துடைய பொருள்களை கொடுக்கிறார்கள். ஆனால் இப்படி கொடுப்பவர்களுடைய ஸகாத் கடமை நீங்காது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.


பள்ளிவாசல்மதரசாஅநாதை இல்லம் இவைகளில் பணிபுரியும் இமாம் மோதினார்இதர பணியாளர்களுக்கு காத் பொருள்களை  சம்பளமாக கொடுக்கக்கூடாது.

 

ஏழைகள் நலனைக் கருதி...

 

ஸகாத் கடமையாகும் உச்ச வரம்பு (நிஸாப்தங்கம் பவுன் 87 1/2  கிராம். வெள்ளி 612 1/2   கிராம் ஆகும்.


அந்த கால கட்டத்தில் 612 1/2 கிராம் வெள்ளியின் விலை அளவுக்கு ஒருவரிடம் ரொக்கப் பணம் அல்லது வியாபாரச் சரக்குகள் இருந்தால் அவர் மீது ஸகாத் கடமையாகும்.


அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "இரு பெண்கள் கைகளில் தங்க வளையல்கள் அணிந்தவர்களாக அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அவ்விருவரிடம் அண்ணலார், ( أَتُؤَدِّيَانِ زَكَاتَهُ ) “இதற்கான காத்தை நிறைவேற்றி விட்டீர்களா?" என்று வினவினார்கள்.  அதற்கு அப்பெண்கள், "நிறைவேற்றவில்லை."  என பதிலளித்தனர். இதை செவியுற்ற அண்ணலார்,  ( أَتُحِبَّانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ ) “நரக நெருப்பாலான இரு வளையல்கள் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அணிவிப்பதை நீங்கள் விரும்புவீர்களாஎன வினவினார்கள். அவர்கள், “இல்லை (விரும்பமாட்டோம்)” என்று கூறினர். அப்போது அண்ணலார், ( فَأَدِّيَا زَكَاتَهُ ) “அப்படியானால் அதற்குரிய காத்தை நிறைவேற்றி விடுங்கள்” என்று கட்டளையிட்டார்கள்.         நூல் : திர்மிதீ - 576


இறையச்சம் உள்ளவர்களுக்கு இந்த ஒரு நபிமொழியே போதுமானது. இதை உணர்ந்து பெண்கள் செயல்பட வேண்டும்.


தாராளமாக


உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது.  ஒருமுறை அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் காத் வசூலிக்க என்னை அனுப்பினார்கள். நான் ஒரு நபித்தோழரிடம் சென்று சொத்துக்களை கணக்கிட்ட பிறகு, அவரிடம் ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகக்குட்டி ஸகாத்தாகக் கொடுங்கள்; அதுதான் நீங்கள் தரவேண்டிய காத்தாகும்" என்று கூறினேன்.

 

அதற்கு அவர், "இது பாலும் கொடுக்காது; இதில் சவாரியும் செய்யவும் முடியாது. (வேறு ஓர் ஒட்டகத்தைக் காட்டி) இது கொழுத்த பெரிய பலம் மிக்க வாலிப ஒட்டகம். இதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அப்போது நான், எனக்கு கட்டளையிடப்படாத ஒன்றை நான் எடுக்க மாட்டேன். இதோ அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு அருகில் தான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை அண்ணலாரிடம் சொல்லுங்கள்" என்றேன்.

 

அவர் அந்த ஒட்டகத்துடன் அண்ணலாரிடம் வந்து, நடந்தவற்றை விவரித்தார். உங்கள் தூதர் என்னிடமிருந்து வசூலிக்க மறுத்த அந்த ஒட்டகம் இதுதான். இதை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நாயகமே! (நீங்களாவது) இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

 

அப்போது அண்ணலார், ( ذَاكَ الَّذِي عَلَيْكَ فَإِنْ تَطَوَّعْتَ بِخَيْرٍ آجَرَكَ اللَّهُ فِيهِ وَقَبِلْنَاهُ مِنْكَ ) "உன் மீது கடமையானது ஓராண்டு பூர்த்தியான பெண் ஒட்டகம் தான். இந்தச் சிறந்த ஒட்டகத்தைப் பிரியப்பட்டு, நீ அதிகப்படியாகக் கொடுத்தால் அல்லாஹ் அதற்குக் கூலி அதிகமாக உனக்குக் கொடுப்பான். உன்னிடமிருந்து இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு அதை பெற்றுக் கொள்ளும்படி எனக்கு கட்டளையிட்டு, அவரின் பொருளில் அருள்வளத்திற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-1350

 

(ஏழைவரி எனும்) காத் என்பது நமது சொத்திலிருந்து ஆண்டிற்கு ஒருமுறை நாற்பதில் ஒரு பாகத்தைத் தகுதியுடையோருக்குக் கொடுப்பதாகும். இதில் கொஞ்சம் கூடுதலாகவும், தாராளமாகவும் வழங்கலாம். அதில் ஒன்றும் சிரமம் ஏற்படாது. செல்வந்தர்கள் இதை கவனிக்க வேண்டுமே!


கடமையாக்கப்பட்டதின் இலட்சியம்.


ஸகாத் கடமையானவர்கள் தனது ஜகாத் ரூபாய்களை சில்லரையாக மாற்றிக் கொண்டு ஐநூறு ரூபாய்ஆயிரம் ரூபாய் என்று கொடுப்பதுசிலருக்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதும் இப்படி, ஸகாத்தின் ரூபாய்களை செலவிடுவதால் ஸகாத் வேண்டுமானால் நிறைவேறிவிடும். அல்லாஹுத்தஆலா ஸகாத்தை கடமையாக்கியதின் இலட்சியம் நிறைவேறாது.


ஸகாத் கடமையான ஒருவர் தனது காத் பொருட்களின் மூலம் ஒரு கடனாளியை கடனில் இருந்து விடுபட செய்யலாம். தகுதி இருந்தும் படிக்க வசதியற்ற மாணவர்களின் படிப்புக்கு உதவலாம். போதிய மருத்துவம் செய்ய வசதியற்ற நோயாளிகளுக்கு மருத்துவ உதவி புரியலாம். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒரு ஏழைக்கு ஒரு தொழில் துவங்க முழு ஒத்துழைப்பு தரலாம். இப்படி ஒத்துழைப்பு தந்தால் தனது காத் பொருட்களின் மூலம் தொழில் துவங்கியவர்அவர் தனது தொழிலின் மூலமாக செல்வத்தைப் பெருக்கி நன்றி மறக்காமல்அவரும் பலருக்கு தொழில் துவங்க ஒத்துழைப்பு கொடுப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?


ஸகாத் கடமையானவர்கள் ஒவ்வொருவரும் இது போலவே செயல்பட்டால்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்பசிபட்டினிவறுமை போன்றவைகள் விரண்டோடும்.


அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியதெல்லாம் ஏழ்மையை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட சிறந்த திட்டம் என்பதை நினைவில் நிறுத்தி, ஸகாத்தை முறையாக செயல்படுத்துவோம். அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக! ஆமீன்!


 மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...