Search This Blog

Thursday, 27 March 2025

உணர்வுகளை மதிப்போம்!

 உணர்வுகளை மதிப்போம்!

 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ

(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். திருக்குர்ஆன்:- 6:108

 

பிறர் உணர்வுகளை புரிந்துகொள்வதும் மற்றும் மதிப்பதும்  ஓர் நல்ல முஸ்லிமின் முதல் அடையாளம் ஆகும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதும்அழுவதும்தான் உண்மையான மனித நேயம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது ஒரு நல்ல பண்பு.

 

பிறர் உணர்வுகளை மதிப்பதற்கான வழிகள்: பிறரது இடத்தில் நம்மை வைத்து அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும்அழுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இதுமற்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும்.

 

நாம் இவ்வாறு உண்மையானவராக இருக்கும்போது மக்கள் நம்மை இயல்பாகவே மதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவு படித்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

 

நம்மைப் போன்றே மற்றவர்களுக்கும் சுய விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றிலும் இருக்கவே செய்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை தவிர்த்து சுயநலமியாக தனது ஆசாபாசங்களையும்விருப்பு வெறுப்புகளையும் மட்டுமே கருத்தில் கொள்வது சரியல்ல.

 

மனைவியர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்அல்லது அவர்களே என்னிடம், ( تَشْتَهِينَ تَنْظُرِينَ ) “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.

 

உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்கஎன்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். ( دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ ) “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) சலிப்புற்றுவிட்டபோது ( حَسْبُكِ ) ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ( فَاذْهَبِي ) “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-950

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார்கள். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப்பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றதுஇவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள்? என்று சற்று யோசிக்கவேண்டும்.

 

மனைவியின் உணவுஉடைஅவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும், அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.

 

குழந்தைகள்

 

ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரும்போது (தம்முடைய பேரக் குழந்தைகளான) ஹசன் ஹுசைனையோ தூக்கிக்கொண்டு வந்தார்கள். பிறகு பேரக்குழந்தையை இறக்கிவிட்டுவிட்டுத் தொழுகைக்காக தக்பீர் கூறித் தொழலானார்கள். அப்போது அவர்கள் தமது தொழுகையில் (சஜ்தா எனும்) சிரம்பணிதலை நீட்டினார்கள்.

 

(நீண்ட நேரம் ஆனதால்) எனது தலையை உயர்த்திப் பார்த்தபோது, (பேரக் குழந்தை) நபியவர்களின் முதுகில் இருக்கஅவர்கள் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (மீண்டும்) நான் என் சஜ்தாவுக்கே திரும்பிவிட்டேன்.

 

நபியவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது மக்கள், "நாயகமே! நீங்கள் உங்கள் தொழுகையில் எங்களுடன் நீண்ட நேரம் சஜ்தா செய்தீர்கள். நாங்கள்ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டதுஅல்லது உங்களுக்கு (வஹீ எனும்) இறைசெய்தி அறிவிக்கப்படுகிறது என்ற கருதிவிட்டோம்" என்று கூறினர்.

 

அதற்கு நபியவர்கள், ( كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ ) "இவற்றுள் எதுவும் நிகழவில்லைஎன் (பேரப்)பிள்ளை என் மீது சவாரி செய்தான். அவன் விருப்பம் நிறைவேறும்வரை சஜ்தாவிலிருந்து விரைந்து என நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள். நூல்:- நசாயீ-1129, முஸ்னது அஹ்மத்ஹாக்கிம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ்உபைதுல்லாஹகஸீர் (ரலி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ( مَنْ سَبَقَ اِلَيَّ فَلَهُ كَذَا وَكَذَا ) "யார் என்னிடம் முதலில் ஓடிவருகிறாரோ அவருக்கு இன்னின்னது (பரிசாகக்) கிடைக்கும்" என்று கூறுவார்கள். சிறுவர்கள் அண்ணலாரிடம் ஓடி வந்து அவர்களது நெஞ்சிலும், முதுகிலும் விழுவார்கள். அப்போது அண்ணலார் அச்சிறுவர்களை கட்டியணைத்து முத்தமிடுவார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1739

 

நம்மிடம் பிள்ளைகள் விளையாடும்போது அவர்கள் உணர்வுகளை மதிக்கும் விதமாகநாம் அவர்களை விளையாட்டை ஆமோதிக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரியே! முடிந்தால்நாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போதுநம்முடன் அவர்கள் மிகவும் இணக்கமாகிவிடுவார்கள். அந்நேரத்தில் நாம் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கங்களை கற்றுத்தரும்போதுஅதற்கு அவர்கள் செவியேற்கக்கூடும். சில நேரங்களில் நாம் பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி விடுதல்மிகுந்த சந்தோஷத்தைத் தரும்.

 

குடும்பத்தினர்

 

மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையையும் முஸ்லிம்களின் எழுச்சியும் கண்டு பயந்துபோன இக்ரிமா எமன் தேசத்திற்குச் சென்றுவிட்டார்.  அபூஜஹ்லின் மகனான இவர்தமது தந்தையைப் போலவே இஸ்லாத்தின்மீது கடும்பகை கொண்டிருந்தார். இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் யமனுக்குச் சென்று அவரை அழைத்து வந்தார்கள். பின்பு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

தூரத்தில் இக்ரிமா வருவதை பார்த்த நபியவர்கள், ( يَأْتِيكُمْ عِكْرِمَةُ بْنُ أَبِى جَهْلٍ مُؤْمِنًا مُهَاجِرًا ، فَلَا تَسُبُّوا أَبَاهُ ، فَإِنَّ سَبَّ الْمَيِّتِ يُؤْذِي الْحَيَّ ، وَ لَا يَبْلُغُ الْمَيِّتَ “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா உங்களிடம் வெகு தொலைவில் இருந்து இறைநம்பிக்கையை கொண்டவராக வருகிறார். எனவே, அவருடைய தந்தையை திட்டாதீர்கள். இறந்துபோன ஒருவரை திட்டுவதால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையை தரும். இறந்தவருக்கு அது தெரியவும் செய்யாது" என்று கூறினார்கள். நூல்: ஹாகிம்அல்இஸ்திஆப்அல்முன்தளிம் இப்னு ஜவ்ஸீதாரீக் திமிஷ்க் இப்னு அசாகிர்சுவரும் மின் ஹயாதிஸ் ஸஹாபா

 

ஒருவரிடம் அவர்களின் முன்னோர்களை குறைகூறிப் பேசுவது அல்லது தமது மனைவியிடம் அவளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை குறைப்பேசி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

 

பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை பேசுவதை விட்டும் தவிர்ந்திருப்பதும்கூட உணர்வுகளை மதிப்பதாகும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.

 

தலைவர்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.

 

அப்போது நபியவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), ( لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى )  ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி) விடாதீர்கள். நூல்:- புகாரீ-3408, முஸ்லிம்-4732

 

உண்மையாகவே நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்மூசா (அலை) அவர்களை பன்மடங்கு உயர்வானவர்கள். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும்அந்த யூதரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது நபியவர்களின் எண்ணம்.

 

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். இந்த பண்பை உடையவர்கள் காலம் கடந்தாலும் மதிப்பளிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இந்த பண்பு இல்லாமல் இருப்பவர்கள் நிச்சயமாக சிறந்த தலைவனாக இருக்க தகுதியற்றவர்களே என்று விளங்கவேண்டும்.  ஆகவேபிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாமும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

அவரவர் தலைவர்கள் அவரவருக்கு உயர்வு தான். நமது தலைவரை பிறர் நேசிக்கவில்லை என்பதற்காக நாம் பிறரின் தலைவர்களை ஏசிபேசிஅவர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடக்கூடாது.

 

கொள்கை கோட்பாடு

 

தலைப்பில் காணும் வசனத்தில் அல்லாஹ் இணைவைப்பாளர்கள் வழிபடக்கூடிய தெய்வங்களை ஏசக்கூடாது என்று முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான். ஏனெனில்அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமையே அதிகம்.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مِنْ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ ) "ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என்று கூறினார்கள். அப்போது, ( يَا رَسُولَ اللَّهِ وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ ) “நாயகமே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?” என்று கேட்கப்பட்டது.


அதற்கு நபியவர்கள், ( نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ ) “ஆம்! ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-146


நபி (ஸல்) அவர்கள் இங்கு நேரடியாக ஒருவன் தன் தாயையோ தந்தையையோ திட்டுவதைக் குறிப்பிடவில்லை. இவன் மற்றவனைத் திட்டும் போது, அவனை மட்டும் திட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், “உனது தாயைத் தெரியாதா? தந்தையைத் தெரியாதா?’ என்று இழுத்துப் பேசுவான். அது தான் தாமதம்! உடனே அவனும் அது போலத் திட்ட ஆரம்பித்து விடுகின்றான். இவ்வாறு அவன் திட்டுவதற்குக் காரணமாக இருந்ததால் அது நீயே நேரடியாகத் திட்டியதாகும். 


அது போன்றுதான், இறைமறுப்பாளர்கள் வழிபட்டு வந்த சிலைகளை முஸ்லிம்கள் ஏசினால்பதிலுக்குப் பதிலாக இறைமறுப்பாளர்கள் அறிவின்றிவரம்பு மீறி அல்லாஹுத்தஆலாவை ஏசுவார்கள். இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

 

இறைமறுப்பாளர்களால் அல்லாஹுத்தஆலா ஏசப்பட இறைநம்பிக்கையாளர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்பதையே தலைப்பில் காணும் வசனம் உணர்த்துகின்றது.


(நபியே!) இவர்கள் உம்மை பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: என்னுடைய வழிபாடுகள் எனக்கு. உங்களுடைய வழிபாடுகள் உங்களுக்கு. நான் செய்யும் வழிபாடுகளிலிருந்து நீங்கள் பொறுப்பு நீங்கியோர் ஆவீர். நீங்கள் செய்யும் வழிபாடுகளிலிருந்து நான் பொறுப்பு நீங்கியவன் ஆவேன். திருக்குர்ஆன்:- 10:41

 

உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு. திருக்குர்ஆன்:- 109:6

 

மறுமைநாளில் நம் அனைவரும் மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம். அங்கே நமது செயல்பாடுகளுக்கு பிரதிபலன் வழங்கப்படும்.

 

ஓர் முஸ்லிம் தமது சகோதர சமயத்தினருக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை எடுத்துரைக்கலாம். ஆனால்அவர்களின் மத நம்பிக்கைகளைஉணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகஅவர்கள் கடவுள்களாக எண்ணி வழிபடுபவற்றை நைய்யாண்டி செய்தல்ஏசி பேசுதல் தவறு. இது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக ஆகிவிடும். இதை இஸ்லாம் விரும்புவதில்லை. சிலைகளும்சிலுவைகளும் கேலி செய்தல் மற்றும் ஏசிபேசிதலுக்கு தகுதியானதாக இருந்தாலும்அவ்வாறு செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சுருங்கக் கூறின்பிறரின் கடவுள் கொள்கை குறித்த உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது.

 

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பிறரின் உணர்வுகளை மதித்து வாழும் நற்பண்புள்ள நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Wednesday, 26 March 2025

மீலாதுந் நபீ

 

மீலாதுந் நபீ

 

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ

(நபியே!) உம்மை நாம் அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அனுப்பியுள்ளோம். திருக்குர்ஆன்:- 21:107

 

ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் இஸ்லாமியப் பெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்மீது அளவற்ற நேசம்கொண்ட முஸ்லிம்கள் நபியவர்களுடைய வாழ்வியல் முறைகள், குணநலங்கள் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவர்களின் சிறப்பம்சங்கள் ஆகிவற்றை நினைவுப்படுத்தி, அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவார்கள். நபியவர்கள்மீது கொண்ட நேசத்தால் புகழ்பாக்கள் (மௌலித்) பாடுவார்கள்.

 

மேலும், நபிநேசத்தால் கந்தூரி ஏற்பாடு செய்து ஏழை எளியோருக்கும், சகோதர சமயத்தவர்களுக்கும் உணவளித்தல் போன்ற நற்செயல்கள் செய்வார்கள். மேலும், அன்றைய தினம் (பிறை-12) மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நபியவர்களை புகழ்ந்து கவிதை படித்துக்கொண்டு முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக ஊர்வலம் சென்று வருவார்கள். இதை பரவலாக காணலாம்.

 

ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது. ( وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ يَوْمَ الِاثْنَيْنِ الثَّانِي عَشَرَ مِنْ شَهْرِ ربيع الأول ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை வருடத்தில் ரபீஉல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாள் திங்கள்கிழமை பிறந்தார்கள்.  நூல்:- முஸன்னஃப் இப்னு அபீஷைபா, ஹாகிம், சீரத் இப்னு ஹிஷாம்

 

அல்லாஹ்வின் அருள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் - ஸல் அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( إنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا، وإنَّمَا بُعِثْتُ رَحْمَةً ) "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 5065

 

நபித்தோழர்களின் பாடினார்கள்

 

ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது பேச்சுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது), “உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபியவர்களைப் பாராட்டி பின்வருமாறு) அவர் பாடினார்” என்றார்கள்:

فِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ     إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ

أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا      بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ

يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ      إِذَا اسْتَثْقَلَتْ بِالْكَافِرِينَ الْمَضَاجِعُ

எங்களிடையே இறைத்தூதர் ஓதுகிறார் இறைவேதம் வைகறைப்பொழுது புலரும் நேரத்தில்

கருத்துக் குருடர்களான எங்களுக்குக் காட்டினார் நல்வழி. அவர் சொன்னது நடக்கும் நிச்சயம்! இது எங்கள் இதய நம்பிக்கை

இரவில் அன்னாரது விலா தொட்டதில்லை படுக்கையை. அப்போது இணைவைப்பாளர் அழுந்திக் கிடப்பர் படுக்கையில்! நூல்:- புகாரீ-6151

 

ஸவாத் பின் காரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் எனது உள்ளத்தில் சோதித்துள்ளான் என்று கூறியவாறு, எனது ஒட்டகத்தில் (மக்காவை நோக்கி) பயணம் செய்தேன். பிறகு மக்கா நகருக்கு வந்தேன். அங்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைச் சுற்றி நபித்தோழர்களும் இருந்தனர். நான் அவர்களிடம் நெருங்கி, நாயகமே நான் கவிப் பாடுவதைக் கேளுங்கள் என்று கூறினேன். நபியவர்கள் ("ஆம்!) பாடுங்கள்" என்றார்கள். நான் பாட ஆரம்பித்தேன்.

فَأَشْهَدُ أَنَّ اللَّهَ لَا شَيْءَ غَيْرُهُ       وَأَنَّكَ مَأْمُونٌ عَلَى كُلِّ غَالِبِ

وَأَنَّكَ أَدْنَى الْمُرْسَلِينَ وَسِيلَةً      إِلَى اللَّهِ يَا ابْنَ الْأَكْرَمِينَ الْأَطَايِبِ

فَمُرْنَا بِمَا يَأْتِيكَ يَا خَيْرَ مَنْ مَشَى    وَإِنْ كَانَ فِيمَا جَاءَ شَيْبُ الذَّوَائِب

سِوَاكَ بِمُغْنٍ عَنْ سَوَادِ بْنِ قَارِبِ   وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَةٍ

அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் (கடவுள்) இல்லையென்றும் நீங்கள் மறைவான செய்திகள் யாவற்றுக்கும் நம்பிக்கையாளர் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன்.

கண்ணியமானோரில் தூயோரின் புதல்வரே! நீர், அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான தூதர் என்றும் (சாட்சியம் அளிக்கிறேன்.)

நடமாடுவோரில் சிறந்தோரே! உமக்கு வந்துள்ள கட்டளையை எங்களுக்கும் ஆணை பிறப்பிப்பீராக! அவை முடிகளை நரைக்கச் செய்யக் கூடியவைகளாக இருந்தாலும் சரியே!

உம்மைத் தவிர பரிந்துரையாளர் இல்லாத நாளில், எனக்கு பரிந்துரையாளராகவும் ஸவாத் பின் காரிபுக்கு ஏற்படும் இன்னலைவிட்டும் தடுக்கக்கூடியதாகவும் ஆகிவிடுவீராக!" என்று பாடினேன்.

 

அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் என் கூற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மகிழ்ச்சி அவர்களின் முகங்களில் தென்பட்டது. பிறகு நபியவர்கள், ( أَفْلَحْتَ يَا سَوَادُ سِرْ فِي قَوْمِكَ، وَقُلْ هَذَا الشِّعْرَ فِيهِمْ ) "ஸவாத்! நீர் வெற்றி பெற்றுவிட்டீர். உன் சமூகத்தினரிடம் பயணமாகி அவர்களிடம் இந்தக் கவிதையைக் கூறுவீராக” என்றுக் கூறினார்கள். நூல்:- முக்தஸர் இப்னு மன்ழூர் லி தாரீக் இப்னு அஸாகிர், ஹவாத்திஃபுல் ஜின்னான் இமாம் அபூபக்ர் அல்கராயித்தீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

அல்உத்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு (கப்ரு) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராமப்புற அரபி வந்தார். நபியவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, "(நபியே!) அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது, உன்னிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்" (4:64) என்ற வசனத்தை ஓதினார்.

 

மேலும், "இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி உங்கள் சமூகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, பின்வருமாறு கவிதையையும் பாடினார்:

يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ أعظُمُه     فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ

نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه        فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ

மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே! / உங்கள் எலும்புகளின் நறுமணத்தால் மண்ணும், மலைக்குன்றும் மணம் கமழ்கின்றன.

நீங்கள் துயிலும் இந்த மண்ணறைக்கு என் உயிர் அர்ப்பணம். / தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது. தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.

 

பின்பு அந்தக் கிராமப்புற அரபி சென்றுவிட்டார். பின்னர் நான் கண் அயர்ந்து உறங்கினேன். கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கண்டபோது, அவர்கள் என்னிடம், ( يَا عُتْبِيُّ اِلْحَقِ اْلأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللهَ قَدْ غَفَرَ لَهُ )  "அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று நற்செய்தி கூறும்" என்று சொன்னார்கள். நூல்:- அஷ்ஷாமில் இமாம் ஷைக் அபூமன்ஸூர் அஸ்ஸப்பாக், தஃப்சீர் இப்னு கசீர், மஜ்மூஉ இமாம் நவவீ

 

இந்த கவிதை வரிகள் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இன்றுவரை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறை (ரவ்ளா ஷரீஃப் உடைய) ஜன்னல்களில் எழுதப்பட்டிருக்கிறது.

 

சரியான விளக்கம்

 

ஒருதடவை (உலக பிரசித்தி பெற்ற புகாரீ எனும் ஹதீஸ் நூலுக்கு "ஃபத்ஹுல் பாரீ" என்ற அழகிய விளக்கவுரை நூல் எழுதிய) மேதையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் மனனமிட்டவருமான இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ் - ஹிஜ்ரீ 773-852) அவர்களிடம் ஒரு மனிதர், “மீலாது கொண்டாடலாமா?" எனக் கேட்டார்.

 

அதற்கு அன்னார், ( أَصْلُ عَمَلِ الْمَوْلِدِ بِدْعَةٌ لَمْ تُنْقَلْ عَنْ أَحَدٍ مِنَ السَّلَفِ الصَّالِحِ مِنَ الْقُرُونِ الثَّلَاثَةِ، وَلَكِنَّهَا مَعَ ذَلِكَ قَدِ اشْتَمَلَتْ عَلَى مَحَاسِنَ وَضِدِّهَا، فَمَنْ تَحَرَّى فِي عَمَلِهَا الْمَحَاسِنَ وَتَجَنَّبَ ضِدَّهَا كَانَ بِدْعَةً حَسَنَةً ) “மவ்லிது நிகழ்ச்சிகள் ஒரு புதுமையே! முந்தைய மூன்று தலைமுறையினர் எவரிடமும் அப்படியொரு நடைமுறை இருக்கவில்லை. எனினும் அதில் உள்ளடக்கியிருக்கிற நன்மைகளை எண்ணிப்பார்க்கையில் அதிலுள்ள நன்மைகளை பேண வேண்டும் என்பதற்காக ஒருவர் மவ்லிது கொண்டாடுவார் எனில் இந்தப் புதுமை ஒரு நன்மையே! (அதனால் தாராளமாகக் கொண்டாடலாம்)” என்று கூறினார்கள்.   

 

மேலும், ( وَقَدْ ظَهَرَ لِي تَخْرِيجُهَا عَلَى أَصْلٍ ثَابِتٍ وَهُوَ مَا ثَبَتَ فِي الصَّحِيحَيْنِ مِنْ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ فَقَالُوا: هُوَ يَوْمٌ أَغْرَقَ اللَّهُ فِيهِ فرعون وَنَجَّى مُوسَى فَنَحْنُ نَصُومُهُ شُكْرًا لِلَّهِ تَعَالَى» ، فَيُسْتَفَادُ مِنْهُ فِعْلُ الشُّكْرِ لِلَّهِ عَلَى مَا مَنَّ بِهِ فِي يَوْمٍ مُعَيَّنٍ مِنْ إِسْدَاءِ نِعْمَةٍ أَوْ دَفْعِ نِقْمَةٍ، وَيُعَادُ ذَلِكَ فِي نَظِيرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ كُلِّ سَنَةٍ ) இதற்கான ஒரு  உறுதியான அடிப்படை புகாரீ முஸ்லிம் ஆகிய நூல்களில் இவ்வாறு ஒரு நபிமொழி இருப்பதாக நான் உணர்கிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆஷூரா நாளில் நோன்பு நோற்ற யூதர்கள் அது மூசா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்ட நாள் என்றும், பிர்அவ்ன் அழிக்கப்பட்ட நாள் என்றும் கூறினார்கள்.  இது, அல்லாஹ் வழங்கிய ஒரு அருளுக்காக, அல்லது ஒரு கொடுமையிலிருந்து நிவாரணம் அளித்தற்காக ஒரு குறிப்பிட்ட நாளை மகிழ்ச்சிக்குரியதாக கருதலாம். அதை ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் வெளிப்படுத்தலாம் என்பதையும் இதன் மூலம் நான் உணர்கிறேன்.

 

மேலும், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ( مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ ) "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ( هَذَا يَوْمٌ عَظِيمٌ ) "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் நபி மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.

 

அப்போது நபியவர்கள், ( فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ ) "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், நபியவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். (புகாரீ-3397, முஸ்லிம்-2083, இப்னு அபீஷைபா, பைஹகீ)

 

"நபி மூசா (அலை) அவர்களுக்கு வெற்றி கிடைத்த நாள், யூதர்களுக்கு மகத்தான நாள் என்றால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட நாள் நமக்கு மகத்தான நாளாகும். எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை கொண்டாடலாம்" என்று பதிலளித்தார்கள்.

 

பலமுறை அஹ்லுஸ் ஸுன்னத் அல்ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் “மீலாதுவிழா கூடும். அதற்கு இறைவனிடம் நற்கூலியுள்ளது” என்கின்றார். நூல்:- அல்இக்திளாஉஸ் ஸிராத்தில் முஸ்தக்கீம் ( اِقْتِضَاءُ الصِّرَاطِ الْمُسْتَقِيمِ )

 

ஏழை எளியோருக்கு உதவலாம்

 

உலக பிரசித்தி பெற்ற புகாரீ எனும் ஹதீஸ் நூலுக்கு “இர்ஷாதுஸ்ஸாரி” என்ற அழகிய விளக்கவுரை நூல் எழுதிய மேதையும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் மனனமிட்டவருமான இமாம் ( شهاب الدين القسطلاني ) ஷிஹாபுத்தீன் அல்குஸ்தலானி (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 851-923) கூறினார்கள். ( وَلَا زَالَ أَهْلُ السَّلَامِ يَحْتَفِلُونَ بِشَهْرِ مَوْلِدُهُ، وَيَعْمَلُونَ الْوَلَائِمَ، وَيَتَصَدَّقُونَ فِي لَيَالِيهِ بِأَنْوَاعِ الصَّدَقَاتِ، وَيُظْهِرُونَ السُّرُورَ، وَيَزِيدُونَ فِي الْمَبَرَّاتِ. وَيَعْتَنُونَ بِقِرَاءَةِ مَوْلِدِهِ الكَرِيمِ، وَيَظْهَرُ عَلَيْهِمْ مِنْ بَرَكَاتِهِ كُلُّ فَضْلً عَمِيمً ) (முன் சென்ற) முஸ்லிம்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தைக் கொண்டாடி, விருந்துகளை நடத்தி, அதன் இரவுகளில் பல்வேறு வகையான தர்மங்களைச் செய்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, (இதுபோன்ற பல) நல்லறங்களை அதிகமாக செய்து வந்தனர். (குறிப்பாக) அவர்கள் நபியவர்களுடைய உன்னதமான பிறப்பை (குறித்து, கவிதைகளை) படிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள். (எனவே அதன் காரணமாக) ஒவ்வொன்றிலும் அந்த முஸ்லிம்களுக்கு நபியவர்களின் (பரக்கத் எனும்) ஆசீர்வாதங்கள் ஏராளமாக கிடைத்தது. நூல்:- அல்மவாஹிபுல் லதுன்யது பில்மனஹில் முஹம்மதியா ( اَلْمَوَاهِبُ الْلَدُنْيَةُ بِالْمَنَحِ الْمُحَمَّدِيَّةِ )

 

அல்லாஹுத்தஆலா, ஓர் முஸ்லிமுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கி அவரை தந்தையாக ஆக்கினான். அவர் அந்த சந்தோசத்தில் ஆண்டுதோறும் தமது குழந்தை பிறந்த தினத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி, இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்துகிறார். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. அதைப்போன்றுத்தான், இல்லை! அதைவிட பன்மடங்கு ஓர் முஸ்லிமுக்கு ஆருயிர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த தினம் சந்தோசத்தை தராமல் இருக்கமுடியாது. எனவே, அன்றைய தினத்தில் சந்தோசம் மற்றும் இறைவனுக்கு செலுத்தும் நன்றியின் வெளிப்பாடாக, பிறருக்கு அன்னதானம் வழங்கி, அதன் நன்மைகள் நபியவர்களுக்கு கிடைக்க பிரார்த்திப்பது (ஈஸால் ஸவாப் செய்தல்) தவறு என்று சொல்ல முடியாது.

 

அதனடிப்படையில் தான், பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான ரபீஉல் அவ்வால் பிறை-12 அன்று, பல ஊர்களில் கந்தூரி வைபோகம் நடைபெறுகிறது.

 

இந்தியாவின் நபிமொழித்துறை நிபுணர் ஷாஹ் வலியுல்லாஹ் அல்முஹத்திஸ் அத்தஹ்லவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. என் தந்தை பேரறிஞர் ஷாஹ் அப்துர் ரஹீம் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: ( كُنْتُ أَصْنَعُ فِي أَيَّامِ الْمَوْلِد طَعَامًا  صِلَة بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (فِي كُلِّ سَنَةً) فَلَمْ يَفْتَحْ لِي سَنَةٌ مِنْ السِّنِينَ شَيْئًا أَصْنَعُ بِهِ طَعَامًا. فَلَمْ أَجِدْ إِلَّا حُمَّصًا مَقْلِيًّا، فَقَسَمْتُهُ بَيْنَ النَّاسِ فَرَأَيْتُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ يَدَيْهِ هَذِهِ الْحُمَّصَ مُتَبَهَّجًا بَشَّاشًا ) நான் (ஒவ்வொரு வருடமும்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தன்று உணவு சமைப்பேன். (அதை மக்களுக்கு வழங்குவேன். இது என்னுடைய பழக்கமாக இருந்தது.) ஆனால், ஒரு வருடம் (நபியவர்கள் பிறந்த தினத்தன்று) எனக்கு உணவு தயாரிக்க (போதிய வசதியின்றி) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என்னிடம் வறுத்த கொண்டைக்கடலை மட்டுமே இருந்தது. அதனால் நான் அவற்றையே மக்களிடையே விநியோகித்தேன். (அதன் பிறகு) நபியவர்களை கனவில் கண்டேன். அப்போது அவர்கள் முன் இந்த கொண்டைக்கடலைகள் இருந்தன. நபியவர்களோ  மகிழ்ச்சி கொண்டவர்களாக இருக்கக் கண்டேன். (அதாவது, எனது இந்தச் செயலை நபியவர்கள் ஆமோதிக்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டேன்). நூல்:- அத்துர்ருஸ் ஸமீனு ஃபீ முபஷ்ஷிராத்திந் நபிய்யில் அமீன் ( اَلدُرُّ الثَّمِينُ فِى مُبَشِّرَاتِ النَّبِيِّ الْاَمِينِ ﷺ لِلشَّاة وَلِيَّ اللَّهِ الدَّهْلَوِيّ رَحِمَهُ اللَّهُ )

 

எனவே, நாமும் முடிந்தளவு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்களாக, மளிகைப் பொருள்களாக, காசு பணங்களாக வாரி வழங்கி நபியவர்கள் மீது நமக்குள்ள பற்றை வெளிப்படுத்தலாம்.

 

இதன் நன்மைகளை நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் நமது முன்னோர்களுக்கும் (ஈஸாப் ஸவாப் எனும்) அன்பளிப்புச் செய்யலாம்.

 

நோன்பு நோற்பது

 

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது.  கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், திங்கள்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ( فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ ) "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 2153

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் திங்கள்கிழமை நோன்பு குறித்து கேட்டதற்கு, "அந்நாளில் தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு முதன்முதலில் குர்ஆன் அருளப்பெற்றது" என்று கூறி அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்நாளில் தான் நோன்பு நோற்பதாக சுட்டிக்காட்டினார்கள்.

 

நபியவர்கள், நமக்கு தலைவராக கிடைத்தது பெரும் பாக்கியம். அல்லாஹுத்தஆலா நம்மீது கொண்ட கருணை. எனவே, நபியவர்களின் பிறந்த தினத்தின்போது (சிறந்த இறைவழிபாடான) நோன்பு நோற்று இறைவனுக்கு நன்றியையும், நபிநேசத்தையும் வெளிப்படுத்தலாம். அல்லது முடிந்தளவு (ஷுக்ரு நஃபில் எனும்) நன்றியைத் தெரிவிக்கும் சில ரக்அத்துகள் தொழுகலாம்.

 

எதிரியாக இருந்தாலும்

 

உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.

 

அபூலஹப், ( لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ ) ‘‘உங்களைவிட்டுப் பிரிந்தபின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார். புகாரீ-5101

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூலஹப் மரணித்த ஒரு வருடத்திற்கு பிறகு அவரை நான் கனவு கண்டபோது அவர் மிக மிக மோசமான ஓர் நிலையில் காட்சியளித்தார். பின்னர் அவர் என்னிடம் கூறினார்: நான் உங்களை விட்டும் பிரிந்த பிறகு ஒரு சுகபோகங்களையும் அடையவில்லை. ஆனாலும் எல்லா திங்கள்கிழமைகளிலும் எனக்கு தண்டனை லேசாக்கப்படுகிறது.

 

இமாம் ஸுஹைலி (ரஹ்) அவர்கள் அதற்கான காரணத்தை  கூறுகிறார்கள். கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள்கிழமை தான் பிறந்தார்கள். இந்தச் செய்தியை அபூலஹபுடைய அடிமைப் பெண்ணாக இருந்து வந்த ஸுவைபா என்பவர்தான் அவரிடம் சென்று கூறினார். இதை கேட்டவுடனேயே மகிழ்ச்சியில் அபூலஹப் அப்பெண்மணியிடம் “நான் உன்னை விடுதலை செய்துவிட்டேன்” என்று கூறினார். எனவே, அதன் காரணமாக தான் அவருக்கு ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் தண்டனை இலேசாக்கப்படுகிறது.  நூல்:- ஃபத்ஹுல் பாரி 

 

இமாம் இப்னு நாஸிருத்தீன் அத்திமஷ்கி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நிரந்தரமான நரகவாசி என்று இறைவனால் விதிக்கப்பட்டு அவனது இரு கரங்களும் நாசமடையட்டும் என குர்ஆனில் விமர்சிக்கப்பட்ட இறைமறுப்பாளன் அபூலஹப்.

 

அப்படிப்பட்ட இறைமறுப்பாளனுக்குகூட கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நேரத்தில் சந்தோஷமடைந்த ஒரே காரணத்தால் எல்லா திங்கள்கிழமைகளிலும் (இறைவனின் கருணை அறவே இறங்காத நகரத்திலும்) தண்டனை இலேசாக்கப்படுகிறது என்றால், முஸ்லிமாக வாழ்ந்து கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை கொண்டு ஆனந்தம் அடையக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு எவ்வளவு பெரிய பிரதிபலன் கிடைக்கக்கூடும்.  நூல்:- அல்ஹாவீ லில் ஃபதாவா - 1/230

 

அழகிய நடைமுறை

 

ஆரம்ப காலத்தில் மீலாத் விழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் இப்போது கூடாது எனில், பள்ளிவாசல்களில் மினாராக்கள்கூட வைக்கக்கூடாது. ஏனெனில், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலோ நபித்தோழர்களின் காலத்திலோ மினாராக்கள் இருந்ததில்லை. பின்னர் அப்பாசிய கலீபாக்களின் காலத்தில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பெருமிதமான அடையாளமாகத்தான் மினாராக்கள் வந்தன. அதை ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகும் ஏற்றுக்கொண்டதே! இன்று மக்காவிலும் மதீனாவிலும்கூட ஓங்கி உயர்ந்த மினாராக்கள் இருக்கின்றனவே! இதைக் கூடாது என்று சொல்லமுடியுமா?

 

இதுபோன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்தில் இல்லாத பல விஷயங்கள் நம்முடைய புழக்கத்தில் இருக்கிறது. அது பிழையும் அல்ல.

 

நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்மீது அதிகப் பிரியமுள்ள நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழ செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...