Search This Blog

Wednesday, 21 December 2022

நெத்தியடி

 

  

நெத்தியடி

 

قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ

 

(அப்போது) இப்ராஹீம் கூறினார்: திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்கில் உதிக்கும்படிச் செய்! (பார்க்கலாம்)என்று கூறினார். (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப்போனான்.  திருக்குர்ஆன்:-  2:258

 

நாம் எப்போது எதைப் பேசினால் அல்லது எதைச் செய்தால் வெற்றியடைய முடியும் என்று சிந்தித்து செயல்படுவதையே சமயோசித அறிவு என்கிறோம். அந்த சமயோசித அறிவு சாமானியனுக்கு சாத்தியப்படாது. சமயோசித அறிவு பெற்றவர்கள் சாதித்தவை ஏராளம்.

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களது காலத்தில் வாழ்ந்த "பாபில்" நாட்டு அரசன் "நம்ரூத் பின் கன்ஆன்" என்பவன் தன்னை இறைவனாக பிரகடனப்படுத்தினான்.


எனவே, இவன் இறைவன் விஷயத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் தர்க்கம் செய்தான். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவன் உயிர்கொடுப்பான்; இறக்கச்செய்வான்" என்று கூறினார்கள். அதற்கு அவன், "நானும் உயிர்கொடுப்பேன் இறக்கச்செய்வேன்" என்று வாதம் புரிந்தான். அவன் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெத்தியடியாக இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க செய்கிறான். முடிந்தால் நீ அதை மேற்கில் உதிக்க செய் பார்க்கலாம்" என்று கூறி அவனை வாயடைக்க செய்தார்கள். இதைப் பற்றியே தலைப்பில் காணும் திருவசனம் விவரிக்கிறது.


நரகம் எங்கே?

 

(பைசாந்திய மன்னர்) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் கடிதத்திற்குப் பதில் கடிதம் எழுதினார். அதில், ( إِنَّكَ دَعَوْتني إِلَى جَنَّةٍ عَرْضُها السَّمَاوَاتُ وَالْأَرْضُ، فَأَيْنَ النَّارُ؟ ) "(முஹம்மதே!) வானங்கள் மற்றும் பூமியின் அகலம் கொண்ட சொர்க்கத்திற்கு வருமாறு எனக்கு நீங்கள் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்; அப்படியாயின் நரகம் எங்குள்ளது? என்று கேட்டிருந்தார். அதற்கு அண்ணலார், ( سُبْحَانَ اللهِ! فَأَيْنَ اللَّيْلُ إذَا جَاءَ النَّهَارُ؟ ) “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) பகல் வந்தால் இரவு எங்கே போகிறது?” என்று (திருப்பிக் கேட்டு வாயடைக்குமாறு பதில்) எழுதினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

பகல் வந்துவிட்டால் இரவை நாம் காண முடிவதில்லை என்பதால் இரவு எங்குமே இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. அவ்வாறு (வானம், பூமி அளவுக்குச் சொர்க்கம் விசாலமாக இருக்கும் போது) நரகமானது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நாடினால் ஒரு இடத்தில் இருக்கும்.

 

பூமியின் ஒரு பகுதியைப் பகல் மூடிக்கொண்டால் இரவானது அதன் நேர் எதிர்த் திசைக்கு சென்றுவிடும். ஆகவே, வானங்கள் மற்றும் பூமியின் அகலம்  அளவிற்குச் சொர்க்கம் இருந்து, அதே நேரத்தில் நரகமும் இருப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது. அல்லாஹ்வே மிக அறிந்தவன். நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர் ஆலு இம்ரான் வசனம்-133

 

காரிஜியாக்கள்

 

ஒருமுறை காரிஜியாக்களின் தலைவர் ளிஹாக் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களை சந்திக்க வந்தார். உமையாக்களின் ஆட்சி காலத்தில் கூஃபாவில் அவர் செல்வாக்கு பெற்றிருந்தார்.

 

ளிஹாக்: வாளை உருவி நீட்டியவாறு இமாமவர்களிடம் "பாவமன்னிப்பு செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னார். இமாமவர்கள்:  எதற்காக என்று வினவினார்கள்.

 

ளிஹாக்: முஆவியா (ரலி) அவர்கள் மற்றும்  அலீ (ரலி)  அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின்போது தீர்ப்புக்கூற மூன்றாம் தரப்பு நடுவரை அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டதை நீங்களும் சரியென ஒப்புக்கொள்கிறீர்கள். அலீ (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் இருந்தபோதும் அவர்கள் இங்ஙனம் செய்திருக்கிறார் என்றால் என்ன பொருள்?

 

இமாமவர்கள்: (என்னைக் கொல்வது தான் நோக்கமென்றால் கொன்றுவிடுங்கள்.) உண்மையை அறிய ஆசைப்பட்டால் என்னை கொஞ்சம் பேச விடுங்கள். 


ளிஹாக்: விவாதிக்க விரும்புகிறேன்.

 

இமாமவர்கள்: நாம் விவாதிக்கும் விஷயத்தில் ஒரு முடிவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது


ளிஹாக்: நாம் இருவரும் ஒருவரை நடுவராக ஏற்றுக்கொள்ளலாம் என்றார். அவர்களிலிருந்தே ஒருவரை நடுவராக நியமித்தார்கள். இருவர் கருத்திலும் எது சரி? எது தவறு? என்பதை அவர் தீர்மானிக்கவேண்டும்.


இமாமவர்கள்:  ( وَیْحَكَ اَتُجَوِّزُ التَّحْکِیْمَ فِیْمَا یَشْجُرُ بَیْنِي وَبَیْنَكَ وَتُنْکِرُهُ عَلَی اثْنَیْنِ مِنْ صَحَابَةِ رسولِ اللهِ صلی الله علیه وسلم ) நீ நாசமாக! உனக்கும் எனக்கும் மத்தியில் நடைபெறும் விவதாத்தில் நடுவராக மற்றொருவர் இருப்பதை சரிதான் என்கிறாய். ஆனால், அந்த நபித்தோழர்களுக்கு மத்தியில் நடைபெற்ற விவதாத்தில் நடுவராக மற்றொருவர் இருந்ததை (தவறு என்று கூறி) வெறுக்கிறாயே?" (இதைத்தானே அவர்களும் செய்தார்கள். அப்புறம் அவரை மட்டும் குற்றம் சொல்கின்றீர்களே.) என்றார்கள்.

 

ளிஹாக் வாயே திறக்காமல் இடத்தை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.  நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லி, ஸுவரும் மின் ஹயாத்தித் தாபிஈன்

 

அறிஞர்கள் அவையில்

 

சுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), காழீ இப்னு அபூ லைலா (ரஹ்), ஷுரைக் (ரஹ்), இமாம் அபூஹனீஃபா (ரஹ்) ஆகியோர் ஓர் அவையில் கூடியிருந்தனர்.

 

அங்கே ஒருவர் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது: ஓர் இடத்தில் சிலர் கூடி இருந்தனர். திடீரென ஒரு பாம்பு வெளிப்பட்டது. ஒருவர் மீது ஏறி விட்டது. பதற்றத்தில் அவர் உதறினார். அது அடுத்த ஆள் மீது போய் விழுந்தது. அவரும் பதறிப்போய் எடுத்து வீசினார். இப்படியாக அனைவரும் வீச போய் கடைசி மனிதரை அது தீண்டிவிட்டது. விஷம் தலைக்கேறி இறந்துவிட்டார். இப்போது அவருக்கான (திய்யத்) நஷ்டயீட்டுத் தொகையை யார் தர வேண்டும்?.

 

கொஞ்சம் சிக்கலான பிரச்சினை என்பதால் அனைவரும் யோசித்தனர். அவர்களில் ஒருவர் "அனைவரும் சேர்ந்து நஷ்டயீட்டுத் தொகை தரவேண்டும்" என்றார். மற்றொருவர் "முதல் மனிதர் தான் கொடுத்தாக வேண்டும்" என்றார். இப்படி பல கருத்துக்கள் விவாதித்தும் தீர்வு எட்ட வில்லை. இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். கடைசியில் அனைவரும் அவரை முன் நோக்கினர். தங்கள் கருத்து தான் என்ன? என்று வினவினர்.

 

இமாமவர்கள் "முதல் மனிதர் அடுத்தவர் மீது வீசினார். ஆனால் அவர் சாகவில்லை. எனவே, அவர் குற்றமற்றவர். இரண்டாமவரின் நிலையும் அப்படியே.  மூன்றாமவர் தன்மீது பாம்பு விழுந்ததும் பதற்றத்திலும் உயிரைக் காக்கும் துடிப்பிலும் தூக்கி எறிந்து விட்டார்.

 

கடைசி ஆளின் நிலையை யோசிக்க வேண்டும். இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. பாம்பு விழுந்தவுடன் தீண்டியதா? இல்லை கொஞ்ச நேரம் கழிந்ததா? விழுந்தவுடன் தீண்டியது என்றால் மூன்றாம் நபர் ஈட்டுத்தொகைத் தந்தாக வேண்டும். கொஞ்ச நேரம் கழிந்து என்றால் இவரும் குற்றமற்றவராக ஆகிவிடுகின்றார். விழுந்தவுடன் தூக்கி வீசாமல் நான்காவது நபர் அலட்சியமாக இருந்தது ஏன் என்ற கேள்வி எஞ்கின்றது?

  

இமாம் அவர்களின் கருத்தை ஒருமித்து அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். நூல்:- சீரத்தே நுஃமான் அல்லாமா ஷிப்லி

  

ஷீஆக்கள்

 

ஒருமுறை ஷீஆக்களுக்கும், சன்னிகளுக்கும் மத்தியில் விவாதம் ஒன்று நடைபெற இருந்தது யார் உண்மையான முஸ்லிம்கள் என்று... குறித்த நேரத்தில் ஷீஆக்களுடைய பெரும் பெரும் அறிஞர்கள் எல்லாம் சமூகமளித்திருந்தனர், ஆனால் சன்னிகள் சார்பில் எவரும் வந்திருக்கவில்லை.

 

கொஞ்சம் தாமதித்து இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் மாத்திரம் வந்தார்கள்.  சபையருகில் வந்ததும் தமது செருப்பை எடுத்து அக்குளில் வைத்துகொண்டார்கள். இதை கண்ட ஷீஆக்கள், ஏன் செருப்பை அக்குளில் வைக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

 

இமாம் அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷீஆக்கள் செருப்பை திருடுபவர்களாக இருந்தார்கள் என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். அதனால் தான் நான் எனது செருப்பை அக்குளில் வைத்தேன்என்று கூறினார்கள்.

 

இதை கேட்ட ஷீஆ அறிஞர்கள், “நபியவர்கள் காலத்தில் ஷீஆக்கள் இருக்கவில்லையேஎன்று கூறினார்கள். உடனே இமாம் அவர்கள், “அப்படியானால் விவாதம் இப்போதே முடிந்து விட்டது என்று கூறியவாறு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷீஆக்கள் இல்லையென்றால் உங்களுடைய மதத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்என்று கேட்டார்கள்.

 

இன்றுவரை ஷீஆக்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை.


மனமாற்றமடைந்தனர்

 

ஞானி ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்களிடம் முஃதஜிஸிலாக்கள் என்ற ஒரு பிரிவினர்  "இவ்வுலகிலும் மறுஉலகிலும் அல்லாஹ்வை பார்க்க இயலாது" என்ற தங்களின் கொள்கையை முன்வைத்து வாதிட வந்தனர்.

  

அன்னார் அவர்களை நோக்கி, "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "இம்மையிலோ மறுமையிலோ அல்லாஹ்வை கண்களால் பார்க்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை" என்றார்கள்.

  

அதற்கு அன்னார், "நான் கேட்பதற்கு அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை சொல்லுங்கள். அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று உங்களின் உள்ளம் விரும்புகிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்! எங்கள் உள்ளம் விரும்புகிறது" என்றார்கள்.

  

அன்னார், "பார்க்க முடியாத ஒன்றை உள்ளம் விரும்புமா?" என்று வினவினார்கள். "வாசனையை நுகரத்தான் உள்ளம் விரும்பும். காற்றை சுவாசிக்க தான் உள்ளம் ஆசைப்படும். ருசியை சுவைக்கத்தான் உள்ளம் விரும்பும். இவற்றை எந்த மனிதனும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டான். அவன் இதயத்தில் அந்த ஆசையே எழும்பாது. ஏனென்றால் அவற்றை கண்ணால் காண முடியாது. எதை பார்க்க முடியுமோ அதை பார்க்கத்தான் இதயம் விரும்பும். எனவே, அல்லாஹ்வை பார்க்க முடியும் என்று உங்கள் இதயம் நம்புகிறது. எனவேதான் அதை விரும்புகிறதுஎன்றார்கள்.

  

தொடர்ந்து, “நம் இதயம் விரும்புகிற ஒன்றை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( فَإِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ الْقَمَرَ لَيْلَةَ الْبَدْرِ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ ) "(மறுமை நாளில்) பௌர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதைப் போல் நீங்கள் அல்லாஹ்வை காண்பீர்கள். அவனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். (நூல்:- புகாரீ-806, முஸ்லிம் -299,திர்மிதீ-2247)  என்று இதயம் நம்புவதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள்.

  

இந்த பதிலை கேட்டு திகைத்து போன முஃதஸிலாக்களின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. பலர் அந்த இடத்திலேயே பாவமன்னிப்புக் கோரி மனமாற்றமடைந்தனர். நூல்:- முஃஜிஸா கியாஹே

 

பல நூறு அறிவியல் ஆதாரங்கள் ஏற்படுத்தாத மனமாற்றத்தை, ஒரு ஞானியின் கேள்விக் கணைக்கள் எதிர் கொள்கையுடையவர்களின் இதயத்தை துளைத்தெடுத்து மனமாற்றத்தை உருவாக்கியது.


பாக்கியத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஹள்ரத் ஷேக் ஆதம் (ரஹ்) அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ கூட்டத்தை கடந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒரு பாதிரியார், முஹம்மது நபி தன்னுடைய மகள் ஃபாத்திமாவைப் பார்த்து, "உன்னை என்னால் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார். ஏசுவோ பாவிகளைப் பார்த்து, "என்னிடம் வாருங்கள்; நான் மன்னிப்புத் தருகிறேன்" என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று"  பேசினார்.

 

இதைச் செவியுற்ற ஹள்ரத் அவர்கள் நேராக கூட்டத்திற்கு உள்ளே சென்று, "நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்கள். ஹளரத்தின் தோற்றத்தைப் பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹள்ரத் அவர்கள் மேடையேறி, "ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து, மகளே! நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்றெண்ணி, நோயைக் கண்டு பயப்படாமல் இருந்து விடாதே! என்கிறார். இன்னொரு மருத்துவர், "தன் மகளைப் பார்த்து மகளே! உன் தந்தையாகிய நான் ஒரு மருத்துவர். எனவேநீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! எதற்கும் பயப்படாதே உன்னை நான் காப்பாற்றிவிடுவேன்என்கிறார். இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டால், முதல் மருத்துவரைத்தானே சிறந்தவர் என்போம். இதில் முஹம்மத் நபி அவர்கள் முதல் மருத்துவரைப் போன்றுத்தான் தன் மகளிடம் கூறினார்கள்" என்று ஹள்ரத் கூறியதும் கிருஸ்தவர்கள் வாயடைத்துப் போயினர். (ஹள்ரத் H.கமாலுத்தீன் ரஹ் சொன்னதாக வெள்ளிமேடை எனும் இணையத்தளத்தில் இருந்து)

 

1977 வேலூர் கோட்டை மைதானத்தில் தி.க இயக்கத்தினரோடு ஒரு கூட்டத்தில் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய ஹள்ரத் ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் பெரியார் தாசன் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் கண்களுக்குத் தெரிகிறாரா? கண்களுக்குத் தெரியாததை எப்படி நம்புவது? எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று பேசினார்.

 

அவரைத் தொடர்ந்து ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள், "கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்புவாயா? அதுவும் இந்தக் காலத்தில், இரயிலில் போகிறபோது எதிரே மரங்கள் ஓடுவதாகத் தெரிகிறது. சும்மா நிற்கிற இரயில் வண்டி ஓடுவதாகத் தெரிகிறது. அதை அப்படியே நீ நம்பி விடுவாயா? எதையும் தீர விசாரித்தால் தான் உண்மை என்கிறாயே. தன்னுடைய பிறப்பையும் அப்படி தீர விசாரித்துத்தான் ஏற்பாயா? அம்மாவை நம்பாவிட்டால் வரலாறு நாற்றமடித்து விடாதா?" என்று கர்ஜித்தார்கள். அந்தக் கேள்வியில் தி.க. வினர் எந்தப் பதிலும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர். (வெள்ளிமேடை எனும் இணையத்தளத்தில் இருந்து)

   

ஷைத்தானைக் கெடுத்தவன் யார்?

 

மௌலானா மஹ்மூது ஹசன் கங்கோஹி (ரஹ்) அவர்கள் முன்னிலையில் ஒரு மனிதர் "ஷைத்தான் அவனைக் கெடுத்துவிட்டான் இவனைக் கெடுத்து விட்டான் என்று மக்கள் கூறுகிறார்கள். சரி! ஷைத்தானைக் கெடுத்தவன் யார்? சொல்லுங்கள் என்று வினவினார். மௌலானா அவர்கள் அவரிடம் சரி! வீட்டில் ரொட்டி, தேனீர், சால்னா தயாரிக்கப்படும் தானே! ரொட்டியை இரும்புச் சட்டியில் சுட்டப்படுகிறது. ரொட்டியை சூடாக்குவது எது? என்று வினவினார்கள். அவர் நெருப்பு என்றார். சரி! பாலை சூடாக்குவது எது? நெருப்பு. தேனீரை சூடாக்குவது எது? நெருப்பு. இறைச்சியை சூடாக்குவது எது? நெருப்பு. இவ்வாறு கேள்வி பதில் தொடர்ந்தது.

 

பிறகு மௌலானா அவர்கள் நெருப்பை சூடாக்கியது யார்? என்று வினவினார்கள். அவர் அது தானாகவே சூடாகி விட்டது என்றார்.

 

அதற்கு மௌலானா அவர்கள் "இதுதான் உண்மை. ஷைத்தானை யாரும் வழிகெடுக்கவில்லை. அவன் தன்னைத்தானே எடுத்துக் கொண்டான். அவனை யாரும் வழிகெடுக்க வேண்டிய தேவை இல்லை" என்று நெத்தியடியாக பதிலளித்தார்கள்.   நூல்:- குத்பாத் மஹ்மூது

 

 காதியானி

 

மௌலானா மஹ்மூது ஹசன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு காதியானியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவன் "மிர்ஸா குலாம் அஹமது நபியாக இருந்தார்" என்று கூறினான். அவருக்கு வஹீ (எனும் இறைச் செய்தி) வந்து கொண்டிருந்தது. வஹீ நபி எனும் இறைத்தூதரிடம் தான் வரும்! வேறு யாரிடமும் வராது என்றான்.

 

நான், "பெண் எப்போதாவது நபியானதுண்டா?" என்று வினவினேன். அவன், “பெண் யாரும் நபியாக ஆனதில்லை” என்றான். நான், திருக்குர்ஆனில் நாம் மூசா (அலை) வின் தாயாருக்கு வஹீ அறிவித்தோம் (28:07)  என்றுள்ளது. பெண் நபியாக முடியாது. ஆனால் நபி அல்லாதவருக்கும் வஹீ வந்துள்ளதே! வஹீ வருவதற்கு நபியாக இருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்? ஆணாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. பெண்ணிடமும் வஹீ வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

  

ஏனெனில் திருக்குர்ஆனில் உமது இறைவன் தேனீக்களுக்கு அனுப்பினான் (16:68)  என்றுள்ளது. எனவே, தேனீயும் நபி என்று சொல்லலாமா? மேலும் உயிரினமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

 

சிலவேளை உயிரற்ற பொருளிடமும் வஹீ வருகிறது. ‘அந்நாளில் அது (பூமி) தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் தனக்கு கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும்’. (99:4,5) பூமியிடம் வஹீ வருகின்றது என்றால் அதுவும் நபியா?” என்றேன்.

  

அப்போது அவன்  "அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வஹீ வரலாமா?" என்று வினவினான். அதற்கு நான் சொன்னேன் ஆம்! திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களுக்கு வஹீ கொண்டு வருகின்றனர். (6:121)

 

நபித்துவப் பிரச்சனை, கொள்கை விசுவாச சம்பந்தமானவகைகளில் உள்ளது என்பதால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் தேவை. அவை பரிசுத்த திருக்குர்ஆனிலிருந்து இருக்க வேண்டும் எனவே எல்லாவற்றையுமே திருக்குர்ஆனிலிருந்து சமர்ப்பித்து கொண்டிருக்கிறேன்.  நூல்:- குத்பாத் மஹ்மூது

 

எனவே, வஹீ வருகிறது என்பதற்காக அவர் நபியாக ஆகிவிட முடியாது. வரும் வஹீ யாரிடமிருந்து யாருக்கு என்ன செய்தி வருகிறது என்று கவனித்துத்தான் அவர் நபியா? அல்லது அவன் வேறு மாதிரியானவனா? என்று தீர்மானிக்க முடியும். எனவே தனக்கு வஹீ வருகிறது என்பதால், தான் நபி என்று வாதிடுபவனெல்லாம் நபியாகிவிட முடியாது என (நெத்தியடியாக) பதிலளித்தார்கள்.

 

பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின்  பேராசிரியர்கள்

 

பாக்கியத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஹள்ரத் ஷேக் ஆதம் (ரஹ்) அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ கூட்டத்தை கடந்து சென்றார்கள். அப்போது அங்கு ஒரு பாதிரியார், முஹம்மது நபி தன்னுடைய மகள் ஃபாத்திமாவைப் பார்த்து, "உன்னை என்னால் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார். ஏசுவோ பாவிகளைப் பார்த்து, "என்னிடம் வாருங்கள்; நான் மன்னிப்புத் தருகிறேன்" என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று"  பேசினார்.

 

இதைச் செவியுற்ற ஹள்ரத் அவர்கள் நேராக கூட்டத்திற்கு உள்ளே சென்று, "நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்கள். ஹளரத்தின் தோற்றத்தைப் பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹள்ரத் அவர்கள் மேடையேறி, "ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து, மகளே! நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்றெண்ணி, நோயைக் கண்டு பயப்படாமல் இருந்து விடாதே! என்கிறார். இன்னொரு மருத்துவர், "தன் மகளைப் பார்த்து மகளே! உன் தந்தையாகிய நான் ஒரு மருத்துவர். எனவேநீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! எதற்கும் பயப்படாதே உன்னை நான் காப்பாற்றிவிடுவேன்என்கிறார். இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டால், முதல் மருத்துவரைத்தானே சிறந்தவர் என்போம். இதில் முஹம்மத் நபி அவர்கள் முதல் மருத்துவரைப் போன்றுத்தான் தன் மகளிடம் கூறினார்கள்" என்று ஹள்ரத் கூறியதும் கிருஸ்தவர்கள் வாயடைத்துப் போயினர். (ஹள்ரத் H.கமாலுத்தீன் ரஹ் சொன்னதாக வெள்ளிமேடை என்ற வலைத்தளத்தில் இருந்து)

  

1977 வேலூர் கோட்டை மைதானத்தில் தி.க. இயக்கத்தினரோடு ஒரு கூட்டத்தில் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்ற இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கிய ஹள்ரத் ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் பெரியார் தாசன் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் கண்களுக்குத் தெரிகிறாரா? கண்களுக்குத் தெரியாததை எப்படி நம்புவது? எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று பேசினார்.

  

அவரைத் தொடர்ந்து ஷப்பீர் அலீ (ரஹ்) அவர்கள், "கண்ணால் பார்ப்பதையெல்லாம் நம்புவாயா? அதுவும் இந்தக் காலத்தில், இரயிலில் போகிறபோது எதிரே மரங்கள் ஓடுவதாகத் தெரிகிறது. சும்மா நிற்கிற இரயில் வண்டி ஓடுவதாகத் தெரிகிறது. அதை அப்படியே நீ நம்பி விடுவாயா? எதையும் தீர விசாரித்தால் தான் உண்மை என்கிறாயே. தன்னுடைய பிறப்பையும் அப்படி தீர விசாரித்துத்தான் ஏற்பாயா? அம்மாவை நம்பாவிட்டால் வரலாறு நாற்றமடித்து விடாதா?" என்று கர்ஜித்தார்கள். அந்தக் கேள்வியில் தி.க. வினர் எந்தப் பதிலும் பேசமுடியாமல் அமர்ந்திருந்தனர். (வெள்ளிமேடை என்ற வலைத்தளத்தில் இருந்து)

  

புரிய வைத்தல்

  

ஒருமுறை தொழுகை நடக்கும் போது ஒசை எழுப்பி ஊர்வலம் சென்றார்கள். அதை தடுக்க கோரி நீதிமன்றம் சென்றனர். அதை விசாரித்த நீதிபதி, “ஒலி எழுப்புவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்கள் இறைவனை ஒருமித்து பக்தியில் மூழ்கி வணங்க வேண்டியது தானே. வெளியில் என்ன சத்தம் என்று காதை நீட்டுகிறீர்கள் அது தொந்தரவு என்றால் இறை வணக்கத்தை ஒர்மையில் செய்யவில்லை என்றே பொருளாகும்எனக் கூறினார்.

  

உடனே அந்த வழக்கை வாதாடிய வக்கீல் அப்துல் கலாம் ஆசாத் (ரஹ்) அவர்கள் அதை கவனிக்காமல் மேஜையில் தாளம் போட்டு ஒசை எழுப்பி கொண்டே இருந்தார்கள். உடனே  நீதிபதி அவர்கள் வக்கீலை கூப்பிட்டு, “நீதிமன்றத்தை அவமதிக்கும் உங்கள் செயல் கண்டிக்கதக்கதுஎன்றார். அப்போது வக்கில் அமைதியாக எழுந்து, “மன்னிக்கவும் உங்கள் கவனம் முழுவதும் தீர்ப்பை வாசிப்பதில் இருக்கும் போது, நான் எழுப்பும் இந்த ஒலி எப்படி உங்கள் கவனத்தை சிதைக்கிறதுஎன்றார்கள். உடனே நீதிபதி தவறை உணர்ந்து பள்ளிவாசல் அருகே ஒலி எழுப்புவது கண்டிக்கத்தக்கதுஎன தீர்ப்பளித்தார்.

  

யார் தனிநாடு பெறத் தகுதியானவர்?

 

1949-ல் ஐக்கிய நாடுகள் சபையில் லிபியர்களின் தனி நாடு கோரிக்கை பற்றிய விவாதம் நடந்தபோது, ஃப்ரான்ஸ் அதிபர் ஃபான்சான் ஒரியோல், "நீங்கள் அறிவீனர்கள். தனி நாடு பெறுவதற்கெல்லாம் தகுதியில்லாதவர்கள்" என்றார்.

 

அவருக்கு மறுப்புத் தெரிவித்த ஷைக் அப்துல் ஹமீது அப்பார், "இத்தாலிய அடக்குமுறையாளர்களுடன் நாங்கள் 20 ஆண்டுகள் போரிட்டுள்ளோம். ஆனால் மூன்றே நாட்களில் உங்களை ஹிட்லர்  தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். நம்மில் யார் தனிநாடு பெறத் தகுதியானவர்?" என்றார். அப்போது ஃபிரான்ஸ் அதிபர் வாயடைத்துப்போனார்.

  

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?

  

வலைத்தளத்தில் வாசித்தவை: இங்கிலாந்தில் இரு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தனர் அவர்களில் ஒருவர் முஸ்லிம். மற்றொருவர் வேறு மதத்தைச் சார்ந்தவர். அப்போது பிற மதத்தைச் சார்ந்த நண்பர், “இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதுஎன்று ஒருவர் கூறினார்.

  

முஸ்லிம் நண்பர், “எதை வைத்து சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பிற மதத்தைச் சார்ந்த நண்பர், “சுதந்திரமாக ஆடை அணியமுடிவதில்லை. சகஜமாக மற்ற ஆண்களிடம் பேச விடுவதில்லைஎன்று கூறினார்.

  

முஸ்லிம் நண்பர், “இந்நாட்டு மகாராணி அறைகுறை ஆடையுடன் வீதியில் உலா வருவாரா? இந்நாட்டு மகாராணி என்னைப் போன்றோரிடம் சகஜமாக பேசுவாரா?” என்று அவர் கேட்க, அவர், அதெப்படி முடியும் அவர் இந்நாட்டு மகாராணி என்று கூறினார்.  முஸ்லிம் நண்பர், “இஸ்லாத்தைப் பொருத்தவரை எல்லா பெண்களும் மகாராணிகள் தான்என்றார்.

  

ஒரு நேர்முகத் தேர்வில் ஒரு நபரிடம், "பசிபிக் சமுத்திரத்தில் இருந்து எத்தனை வாளி தண்ணீர் எடுக்கலாம்?" என்று கேட்டனர். "அது வாளியின் அளவைப் பொறுத்தது" என்று சற்றென்று விடை வந்தது. ஏகப்பட்ட மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

  

ஒரு நபரிடம் "நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள்." என்று சொல்லப்பட்டது. அதற்கு அவர், "நாம் இருவரும் ஒரே மாதிரி நம்மைப் பற்றிய அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறோம்" (Feeling is mutual)" என்றார். அவர் திறன் பாராட்டப்பட்டது.

 

மேற்கண்ட மேன்மக்கள், தம்மிடம் கேள்வி கேட்டவர்களுக்கு நெத்தியடியான பதில்களை தந்தார்கள். அந்த பதில்கள் மூலம் திருந்தியவர்களும் உண்டு. திருந்தாதவர்களும் உண்டு. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை சற்று யோசிக்க வைத்தார்கள் என்பதே பேருண்மையாகும்.

 

மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற, பல நேரங்களில் அவனுக்கு சமயோகித அறிவு தேவைப்படுகிறது. இறைத்தூதர்கள் மற்றும் அவர்கள் வழிவந்த நல்லோர்கள் பலரும் தமது சமயோகித அறிவைக் கொண்டு பற்பல சாதனைகள் புரிந்துள்ளார்கள்.  அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாகவும் வாழ்ந்துள்ளார்கள். எனவே, அல்லாஹ் நமக்கு அது போன்ற அறிவு தெளிவை தருவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Sunday, 18 December 2022

உன்னை நினைத்து...

 

உன்னை நினைத்து...

 

وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

 

அல்லாஹ்வின் திருப்தியை நாடி தம்மை அர்ப்பணித்துக் கொள்வோரும் மனிதர்களில் உள்ளனர். (இத்தகைய நல்)அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த பரிவுடையவன் ஆவான். திருக்குர்ஆன்:- 2:207

 

ஒரு மனிதன் பாவத்தையோ அல்லது தனக்கு பலன் தரும் ஏதேனும் ஒன்றையோ அல்லாஹ்வுக்காக தவிர்த்துக் கொண்டால்,  அதற்காக மற்றோரு அழகிய பகரத்தை அல்லாஹுதஆலா தராமல் இருப்பதில்லை. அதாவது, நம்முடைய சிறிய பெரிய அனைத்து தியாகங்களுக்கும் நற்கூலி கிடைத்தே தீரும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.     ( مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ ثُمَّ يَغُضّ بَصَرَهُ إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا ) ஒரு பெண்ணின் அழகை முதல்முறையாகப் பார்த்து (அதில் மயங்கி விடாமல்) உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்ட முஸ்லிமுக்கு வழிபாட்டில் இன்பம் தேடும் வாய்ப்பை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம்-30, மஜ்மஉஸ் ஸவாயித்

 

இலாபம் தந்த வியாபாரம்

 

சுஹைப் பின் ஸினானூர் ரூமி (ரலி) என்ற நபித்தோழர், நூறு வயது உடையவர். அவர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவிற்கு புலம்பெயர்ந்து செல்லும் போது, குறைஷியர் இவரைப் பின்தொடர்ந்து வந்து தாக்க முற்பட்டனர். இவருடன் வந்த ஒருவரை குறைஷியர் கொன்றும் விட்டனர்.

 

தனி நபராக இருந்த அவர் தன்னிடமிருந்த அம்புக்கூட்டை கையிலெடுத்து, ( يَا مَعْشَرَ قُرَيْشٍ لَقَدْ عَلِمْتُمْ إِنِّي أَرْمَاكُمْ رَجُلًا بِسَهمٍ  وَاَیمُ اللَّهِ لَا تَصِلُونَ اِلَيَّ حَتَّی اَرمِیَکُم بِکُلِّ سَهْمٍ  فِي كِنَانَتِي ثُمَّ أَضْرِبَکُم بِسَيْفِي مَا بَقِيَ فِي يَدِي مِنهُ شَیءٌ ثُمَّ شَأنَکُم بَعدَ ذٰلِكَ وَإِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى مَالِي بِمَكَّةَ وَتُخَلُّو سَبِيلِي ) "குறைஷியரே! உங்களில் அம்பெய்வதில் அதிகத் தேர்ச்சி பெற்றவன் நான்தான் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என் அம்புக்கூட்டிலுள்ள அம்புகளெல்லாம் தீர்ந்து போகும் வரை ஒவ்வொரு அம்பாலும் உங்களைத் தாக்குவேன். அதன்பிறகு என் வாள் என் கையில் இருக்கும் வரை உங்களோடு போராடுவேன். (அதுவரை நீங்கள் என்னை நெருங்க முடியாது.) அதற்கு பிறகு தான் நீங்கள் நாடுவது நடக்கும். எனவே, நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்கு வேறு ஒரு வழி சொல்கிறேன். அதாவது என் செல்வம் மக்காவில் உள்ளது. அதை அடையாளம் காட்டி விட்டால் (அதை எடுத்து கொண்டு) என்னை என் வழியில் விட்டு விடுவீர்களா?” என்று கேட்டார். குறைஷியர் "ஆம்" என்று கூறினர். அவ்வாறே (செல்வம் உள்ள) அவ்விடத்தைக் காட்டியதும், குறைஷியர் அவரை விட்டுவிட்டனர்.

 

அதன்பிறகு இவர் மதீனா வந்தடைந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணலார், ( أَبَا يَحْيَى رَبِحَ البَيْعُ رَبِحَ البَيْعُ ) "அபூயஹ்யா! உமது வியாபாரம் இலாபம் தந்து விட்டது. உமது வியாபாரம் இலாபம் தந்துவிட்டது" என்று கூறிவிட்டு, (தலைப்பில் காணும்) திருவசனத்தை ஓதிக்காட்டினர்கள். அப்போது அவர் அதிகம் மகிழ்ச்சியடைந்தார். நூல்:-  தஃப்சீர் காஸின், ரூஹுல் மஆனி, அஹ்சனுத் தஃபாசீர், கன்ஸுல் உம்மால்

 

அண்ணலாரின் துணைவியர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்றபின், நண்பர்கள் அன்போடு வழங்கிய அன்பளிப்புக்கள், அண்டைவீட்டார் கொடுத்த இரவல் கறவை ஒட்டகங்கள் மூலம் கிடைக்கும் பாலைக்கொண்டு தம் குடும்பத்தாரின் பசியை ஓரளவுக்குத் தணித்தார்கள். பல நாட்கள் அண்ணலாரின் துணைவியர் இல்லங்களில் (அறைகளில்) அடுப்பு எரிந்ததில்லை. சில பேரிச்சம் பழத் துண்டுகளும் தண்ணீரும் தான் அவர்களின் உணவாக இருந்தன. பல சமயங்களில் அந்தப் போதாக்குறையான உணவுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

 

இந்த சூழ்நிலையில்தான் ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு துணைவியர் அண்ணலாரைச் சூழ்ந்துகொண்டு குடும்பச் செலவுக்கு கூடுதலான தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பேச முடியாத அளவிற்கு துக்கம் மேலிட்டவர்களாக அண்ணலார் அமைதி காத்தார்கள். பின்னர் ஒரு மாத காலம் அண்ணலார் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். அப்போது தான் அல்லாஹுதஆலா,

 

நபியே! ஒன்று, நீர் உம்முடைய துணைவியரைவிட்டுப் பிரிந்து விடுவீராக! இவ்வுலக வாழ்க்கையும் அதன் அலங்காரமும் யாரிடத்தில் அவர்களுக்கு கிடைக்குமோ அவர்களிடம் அவர்கள் சென்றுவிடட்டும். அல்லது அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறுஉலகையும் விரும்பினால், நீர் இருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் உம்முடன் வாழ்ந்து அவர்கள் பொறுமை காக்கட்டும். அவ்வாறு பொறுமை காத்தால், அதற்காக அல்லாஹ்விடம் அவர்களுக்கு அதிகமான வெகுமதிகள் கிடைக்கும். எனவே, இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுமாறு உம்முடைய துணைவியாருக்கு நீர் விருப்ப உரிமை வழங்குவீராக! என்று தன் தூதருக்கு சில (33:28,29) திருவசனங்களின் மூலம் கட்டளையிட்டான்.  

 

அப்போது அண்ணலாரின் துணைவியர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறு உலகையுமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பொறுமை காக்க சம்மதித்தனர். இது, துணைவியாரின் நன்னடத்தை உயர் பண்பு ஆகியவற்றை காட்டியது. இதற்குப் பரிசாகவே உயர்ந்தோன் அல்லாஹ் கீழ்காணும் திருவசனத்தை அருளினான்.

 

(நபியே!) இதற்கு மேல் (வேறு) பெண்களுக்கு உமக்கு அனுமதியில்லை. (அவ்வாறே, இப்போது இருக்கும்) துணைவியாருக்கு மாற்றாக அவர்களை நீர் ஆக்கிக்கொள்வதற்கும் அனுமதியில்லை. அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே! (ஆனால்,) உமது வலக் கரம் உடைமையாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (33:52)

 

அதாவது, நபியே! இனிமேல் வேறு எந்த பெண்ணை பெண்களை புதிதாக மணம் முடித்துக்கொள்ளவும், மனைவியரில் எவரையும் விவகாரத்து செய்துவிட்டு அவரிடத்தில் வேறு ஒருவரை மனைவியாக்கிக் கொள்ளக்கூடாது என இறைவன் அறிவித்தான். அதன்பிறகு அண்ணலார் வேறு எவரையும் மணமுடிக்கவும் இல்லை. நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்

 

பாய்ச்சல் குதிரைகள்

 

ஒருநாள் மாலைப் பொழுதில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய மன்னராகவும், இறைத்தூதராகவும் இருந்த சுலைமான் (அலை) அவர்கள் முன் இருபதாயிரம் உயர் ரக பாய்ச்சல் குதிரைகள் அணிவகுத்து காட்டப்பட்டன.

 

அப்போது சுலைமான் (அலை) அவர்கள் குதிரைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதனால் அஸர் தொழுகையின் நேரம் அன்னாருக்கு தவறிப்போனது. பின்னர் சுதாரித்து கொண்டு அந்த தொழுகையை நிறைவேற்றிவிட்டு, தொழுகையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிய அந்த குதிரைகளை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறி, அவற்றை அறுத்து பலியிட்டுவிட்டார்கள். இதைப்பற்றி திருக்குர்ஆன் (38:31,32,33) விவரிக்கிறது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

சுலைமான் (அலை) அவர்கள் குதிரைகளை அறப்போருக்கும் மற்ற பயணத்திற்கும் பயன்படுத்தி வந்தார்கள். எனவே, உயர் ரக பாய்ச்சல் குதிரைகள் அன்னாருக்கு பிரியமாகவும் இருந்தது.

 

(இந்நிகழ்வுக்கு பிறகுதான்) அன்னாருக்கு அல்லாஹ் காற்றை வசப்படுத்தி தந்தான். எனவே,  அன்னார் காலைக் காற்றின் மூலம் ஒரு மாதப் பயணத் தூரத்தையும், மாலைக் காற்றின் மூலம் ஒரு மாதப் பயணத் தூரத்தையும் கடந்து விடுவார்கள் என்கிறது திருக்குர்ஆன் (34:12).

 

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் காலை வேளையில் தமது தரைவிரிப்பின் மீது ஏறி டமாஸ்கஸ் (சிரியா) நகரத்திலிருந்து புறப்படுவார்கள். இஸ்த்தகர் (ஈரான்) வந்து சேர்ந்து அங்கு (அன்றைய) காலை உணவை உட்கொள்வார்கள். பின்னர் மாலை வேளையில் இஸ்த்தகர் நகரிலிருந்து புறப்பட்டு காபூல் நகரை (ஆப்கானிஸ்தான்) அடைந்து அங்கேயே இரவு தங்குவார்கள்.

 

வேகமாக பயணிக்கும் ஒருவருக்கு டமாஸ்கஸ் - இஸ்த்தகர் ஆகிய நகரங்களுக்கிடையிலான தொலை தூரத்தைக் கடக்க ஒரு மாதம் பிடிக்கும். இவ்வாறே இஸ்தக்கர் - காபூல் நகரங்களுக்கிடையிலான தொலை தூரத்தைக் கடக்கவும் வேகமாகச் செல்லும் பயணிக்கு ஒரு மாதம் தேவைப்படும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

சுலைமான் (அலை) அவர்கள் இறைவழிப்பாட்டை விட்டும் திசைத்திருப்பக்கூடிய உலக செல்வமான அந்த உயர் ரக பாய்ச்சல் குதிரைகளை வேண்டாமென அறுத்துப் பலியிட்டுவிட்டார்கள். அதன்பிறகு தான் அல்லாஹ், சுலைமான் (அலை) அவர்களுக்கு விரைவாகப் பயணிப்பதற்கு அந்த குதிரைகளைவிட சிறந்ததாக விளங்கும் காற்றை வசப்படுத்தித்தந்தான்.  

 

புதுத்துணி விற்றப் பணம்

 

ஒருமுறை ஃபாத்திமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள். குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.

 

அலீ (ரலி) அவர்கள், தனது மனைவி கொடுத்த துணியை கடைத் தெருவுக்கு கொண்டு போய் ஆறு வெள்ளிக்காசுகளுக்கு விற்றார்கள். ஆனால் அந்த ஆறு வெள்ளிக்காசுகளையும் கொண்டு வரும்போது ஒரு ஏழை மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் ஏதாவது தாருங்கள் என்று கேட்டார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அதனை அப்படியே தர்மம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

 

வழியில் ஒரு மனிதர் ஒரு ஒட்டகத்தை பிடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அலீ (ரலி) அவர்களைப் பார்த்தவுடன் ( يَا أبا الحسن اشْتَرِ هَذِهِ النَّاقَةَ ) “அபுல்ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை விலைக்கு வாங்கிக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் ( مَا مَعِي ثَمَنُهَا ) “இந்த ஒட்டகத்தை வாங்க என்னிடம் பணம் இல்லை” என்றார்கள். அவர், ( إِلَى أَجَلٍ فَاشْتَرَاهَا بِمِائَةٍ ) “(பரவாயில்லை) இதனை நூறு வெள்ளிக்காசுகளுக்கு தவணை முறையில் உமக்கு விற்பனை செய்கிறேன். பணத்தைப் பிறகு தரலாம். (அது பற்றி கவலை இல்லை)” என்றார்.

 

உடனே அலீ (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள். மற்றொருவர் அங்கு வந்து ( أَتَبِيعُ هَذِهِ النَّاقَةَ؟ ) “அபுல்ஹஸன் அவர்களே! இந்த ஒட்டகத்தை விற்பனை செய்கின்றீர்களா? என்று வினவினார்.

 

ஆச்சரியப்பட்ட அலீ (ரலி) அவர்கள் ( نَعَمْ، وَاشْتَرَيْتُهَا بِمِائَةٍ ) “இதை நான் நூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கினேன். (நீர் எவ்வளவு தருவீர்?)” என்று கேட்டார்கள். அவர்,  ( وَلَكَ مِنَ الرِّبْحِ سِتُّونَ ) நான் இந்த ஒட்டகத்தில் இருந்து உங்களுக்கு 60 வெள்ளிக்காசுகள் இலாபம் கிடைக்குமாறு வாங்கிக் கொள்கிறேன்” (அதாவது 160  வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக் கொள்கிறேன்)” என்று கூறினார். அலீ (ரலி) அவர்கள், சரியென சம்மதித்து ஒட்டகத்தை ஒப்படைத்து 160 வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

 

சிறிது தூரம் சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது முதலில் ஒட்டகத்தை தவணை முறையில் கொடுத்தவர் அங்கு வந்து, ( بِعْتَهُ النَّاقَةَ؟ ) “(அபுல் ஹஸன் அவர்களே!) ஒட்டகத்தை விற்பனை செய்துவீட்டீரா? என்று வினவினார். அலீ (ரலி) அவர்கள் ஆம்! என்று கூறியதும் அவர், ( ادْفَعْ إِلَيَّ دَيْنِي ) “(அப்படியானால் வாக்குப்படி) எனக்கு சேர வேண்டிய தொகையைக் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டார். உடனே அலீ (ரலி) அவர்கள் நூறு வெள்ளிக்காசுகளை கொடுத்துவிட்டு மீதி 60 வெள்ளிக்காசுகளை எடுத்துக் கொண்டுபோய் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள்.

 

ஆச்சரியப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் ( مِنْ أَيْنَ لَكَ هَذَا؟ ) “(நான் கொடுத்த துணிக்கு) இவ்வளவு பணம் எப்படி உங்களுக்குக் கிடைத்தது? என்று வினவினார்கள்.

 

அலீ (ரலி) அவர்கள், ( تَاجَرْتُ مَعَ اللَّهِ بِسِتَّةٍ فَأَعْطَانِي سِتِّينَ ) “(உமது துணியை விற்ற) ஆறு வெள்ளிக்காசுகளை வைத்து அல்லாஹ்வுடன் வியாபாரம் செய்தேன். அல்லாஹ் அதை அறுபதாக பெருக்கித் தந்தான்” என்று கூறி நடந்ததை விவரித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் சந்தோஷப்பட்டார்கள்.

 

உடனே அலீ (ரலி) அவர்கள், அருமை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( الْبَائِعُ جِبْرِيلُ، وَالْمُشْتَرِي مِيكَائِيلُ، وَالنَّاقَةُ لفاطمة تَرْكَبُهَا يَوْمَ الْقِيَامَةِ )  “(அலீயே! உம்மிடம்) ஒட்டகத்தை விற்றவர் (வானவர்) ஜிப்ரீல் (அலை) ஆவார்கள். (உம்மிடமிருந்து) ஒட்டகத்தை வாங்கியவர் (வானவர்) மீக்காயீல் (அலை) ஆவார்கள். மறுமைநாளில் அந்த ஒட்டகம் ஃபாத்திமாவுக்குரிய வாகனமாகும்” என்று சொன்னார்கள். நூல்:- சீரத்துல் ஹலபிய்யா, நுஜ்ஹத்துல் மஜாலிஸ் 

 

சிறந்த பகரம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு ஆகியவற்றை உதறிவிட்டு (இறைவணக்கம் புரிய)  அதிகாலையில் எழும் செல்லும் மனிதனை பார்த்து இறைவன் வியப்படைகிறான். இறைவன் வானவர்களை நோக்கி, என்னுடைய இந்த அடியானை பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்கள் அரவணைப்பு ஆகியவற்றை உதறிவிட்டு அதிகாலையில் (இறைவணக்கம் புரிய) எழுந்து விட்டான். எதற்காக? இந்த அடியானுக்கு என்ன வேண்டும்? (அவன் எழுந்தது) எனது அருள் மீது ஆசை வைத்தா? அல்லது எனது தண்டனைக்கு பயந்தா? என்று கேட்கிறான். பின்னர் இறைவன், "வானவர்களே உங்களையே சாட்சியாக வைத்துக் கூறுகிறேன். நான், அவன் ஆசைப்பட்டதை அவனுக்கு நிச்சயமாக கொடுப்பேன். அவன் எதைப்பற்றி பயப்படுகிறானோ நிச்சயமாக அதிலிருந்து அவனைப் பாதுகாப்பேன்" என்று கூறினான். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( مَا تَرَكَ اَحَدٌ مِّنکُم لِلّٰهِ شَيءًا اِلَّا اٰتَاهُ اللّٰهُ مِمَّا هُوَ خَیرٌ لَّهُ مِنهُ مِن حَیثُ لَا یَحتَسِبُ ) எவரொருவர் அல்லாஹ்விற்காக ஒரு பொருளை இழப்பாரோ அவருக்கு அதைவிடச் சிறந்ததை அவர் அறியா புறத்திலிருந்து அல்லாஹ் வழங்குவான். நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-826

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَرَكَ الْكَذِبَ وَهُوَ بَاطِلٌ بُنِيَ لَهُ فِي رَبَضِ الْجَنَّةِ وَمَنْ تَرَكَ الْمِرَاءَ وَهُوَ مُحِقٌّ بُنِيَ لَهُ فِي وَسَطِهَا وَمَنْ حَسَّنَ خُلُقَهُ بُنِيَ لَهُ فِي أَعْلاَهَا ) ஒருவர் பொய்யை அதுவோ அசத்தியம் என்று தெரிந்ததும் (அல்லாஹ்வுக்காக) கைவிட்டால், அவருக்காகச் சொர்க்கத்தின் கீழ்தளத்தில் மாளிகை எழுப்பப்படும். ஒருவர் விதண்டாவாதத்தை அவர் உண்மையே உரைப்பவரானாலும் (அல்லாஹ்வுக்காக) கை விட்டால், அவருக்காகச் சொர்க்கத்தின் நடுப்பகுதியில் மாளிகை எழுப்பப்படும். ஒருவர் தம் குணங்களை (அல்லாஹ்வுக்காக) அழகுபடுத்திக் கொண்டால் அவருக்காகச் சொர்க்கத்தின் மேல்தளத்தில் மாளிகை எழுப்பப்படும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1916

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ تَرَكَ لُبْسَ ثَوْبِ جَمَالٍ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ‏‏ تَوَاضُعًا كَسَاهُ اللَّهُ حُلَّةَ الْكَرَامَةِ ) எவர் அழகு ஆடையை அணிய சக்தி பெற்றிருந்தும் பணிவின் காரணமாக அதனை அணியாமல் இருந்தாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் ஆடைகளை அணிவித்து கௌரவிப்பான். நூல்:- அபூதாவூத்-4147 முஸ்னது அஹமத்-15066

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ يَسْتَطِيعُ أَنْ يُنَفِّذَهُ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلاَئِقِ حَتَّى يُخَيِّرَهُ فِي أَىِّ الْحُورِ شَاءَ ) யார் தமது கோபத்தை செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான். சொர்க்கக் கண்ணிகளில் (ஹூருல் ஈன்) அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான். அறிவிப்பாளர்:- முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1944

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ ) தூயோன் அல்லாஹ் கூறுகிறான்: ஆதமுடைய மகனே! (மனிதா!) துன்பம் ஏற்பட்ட முதல் கட்ட நிலையிலேயே நீ பொறுமை காத்து, நன்மையை எதிர்பார்த்தால், உனக்கு நான் சொர்க்கத்தைவிடக் குறைவான வெகுமதியைக் கொடுப்பதில் திருப்தியடைய மாட்டேன். அறிவிப்பாளர்:- அபூஉமாமா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1586, முஸ்னது அஹ்மத், அல்அதபுல் முஃப்ரத்-535

 

துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் அதைத் தாங்கிக் கொண்டு பொறுமை காப்பது பாராட்டத் தகுந்தவையாகும் அதை விடுத்து துன்பம் தாக்கியவுடன் புலம்புவது எல்லாம் புலம்பி விட்டு பதற்றத்தை எல்லாம் வெளிப்படுத்திவிட்டு, பிறகு படுவதற்கு ஒன்றுமில்லை என்ற இறுதி கட்டத்தில் அமைதி அடைவது பொறுமை ஆகாது அதற்கு இறைவனிடம் நன்மையும் கிடைக்காது. ஏனெனில், நாள்கள் கடந்துவிட்டால் துயரம் மறைவதும் அந்த அளவு குறைவதும் இயற்கையாகும். இதில் தனிச்சிறப்பு எதுவும் இல்லை.

 

துன்பத்தின் ஆரம்பகட்டத்தில் அல்லாஹ்வுக்காக அதை சகித்துக்கொண்டால் அதற்கான நற்கூலியாக, தண்டனை பெறாமல் சொர்க்கம் செல்லும் நற்பேற்றை அல்லாஹ் வழங்குவான் என்பது இதன் பொருளாகும். தண்டனைக்குப் பின் சொர்க்கம் செல்லும் கூட்டத்தாரில் இவர்கள் சேர மாட்டார்கள்.

 

சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா?

 

கலீஃபா ஹாரூன் அல்ரஷீத் (ரஹ்) அவர்கள் பேரறிஞர் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம், “நான் சொர்க்கவாசி? அல்லது நரகவாசியா? என்று வினவினார். அதற்கு இமாமவர்கள் கலீஃபா நோக்கி, "நீங்கள் பாவம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அதை செய்யாமல் விட்டதுண்டா?"

 

கலீஃபா, “ஆம்! ஒருமுறை நான் ஒரு பெண்மீது வெகு நாட்களாக ஆசை கொண்டிருந்தேன். அவளுடன் உறவு கொள்வதற்கும் முயற்சித்தேன். அவள் எனக்கு இடம் தராமல் விலகிக்கொண்டே இருந்தாள். ஒருநாள் இரவில் அவள் தனிமையில் இருந்தாள். இந்த நேரத்தைப் பயன்படுத்தி அவளை நெருங்கினேன். அவளும் தடை சொல்லவில்லை. அப்போது எனது மனசாட்சி 'ஹாரூனே! உன்னை நீ மக்களை ஆளும் மன்னனாக இருந்து கொண்டு இந்த தவறான காரியத்தைச் செய்யலாமா? மறுமை நாளில் அல்லாஹ்விடம் இதற்கான கேள்வி உண்டு என்பதை மறந்து விட்டாயா?' என்று பேச ஆரம்பித்தது. அப்போது அல்லாஹ்வுக்கு பயந்து அந்தப் பெண்ணை விட்டும் விலகி விட்டேன்" என்று கூறினார்.

 

இமாமவர்கள், "கலீஃபாவே! நீங்கள் சொர்க்கவாசி தான்" என்று கூறிவிட்டு, “எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சொர்க்கம் தான்.” (திருக்குர்ஆன்:- 79:40,41) என்ற திருவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

 

அல்லாஹ்வுக்காக செய்யும் அனைத்து தியாகங்களுக்கும் அழகிய பலன் உண்டு. எனவே, அல்லாஹ்வின் அன்பைப் பெற தியாகங்கள் புரியும் அழகிய பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...